எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர், ஜெயலலிதாவின் ஆன்மா எங்கள் பக்கம் இருக்கும் வரை எவராலும் ஆட்சியையும், கட்சியையும் அசைக்க முடியாது என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பேசினார்.
அரியலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி எம்.ஜி.ஆர். திருவுருவபடத்தை திறந்து வைத்தார். பிறகு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:-
ஒரே தலைவி அம்மா ...
ஜெயலலிதாவினுடைய ஆட்சியிலே ஏழை, எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்திலே உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஆறாண்டு காலத்திலே அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி 21, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 24, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி 16, பொறியியல் கல்லூரி 4, இப்படி ஆறு ஆண்டுகளிலே 65 கல்லூரிகள் உருவாக்கி, நம்முடைய மாணவ செல்வங்கள் ஏழை, எளிய, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் குறைந்த கட்டணத்திலே அந்தந்த பகுதியிலே உயர்கல்வி படிப்பதற்கு வழிவகை செய்த ஒரே தலைவி அம்மா என்பதை இந்த நேரத்திலே பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆசிரியர்களுக்கு வேலை...
அம்மா வழியில் வந்த அம்மாவினுடைய அரசும் இந்த ஆண்டு, அறிவியல் கல்லூரி-8, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி-3, ஆக 11 கல்லூரிகள் இந்த ஆண்டு கொடுத்திருக்கின்றது. ஆக இந்த கல்லூரிகள் மூலமாக ஆங்காங்கே இருக்கின்ற ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். அம்மாவினுடைய ஆட்சியில் தான் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே நாளில் 21,800 பள்ளி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை வழங்கி சாதனை படைத்த முதல்வர் நம்முடைய அம்மா. ஏனென்றால், அதற்கு முந்தைய அரசு, இன்றைக்கு பள்ளிகளில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. அதனால் கல்வித்தரம் குறைந்தது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில், அம்மா அத்தனை காலிப்பணியிடங்களையும் நிரப்பி ஒரே நேரத்தில் அவர்களுக்கு பணியாணை வழங்கிய பெருமை அம்மாவைச் சாரும் என்பதை இந்த நேரத்திலே பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
ரூ. 27,932 கோடி ஒதுக்கீடு
அதேபோல, 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஆண்டுக்கு 27,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மற்ற துறையைக்காட்டிலும், கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது, அதிக நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு என்று இந்த நூற்றாண்டு விழாவின் மூலமாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். இதுதவிர, 438 கோடி ரூபாய் செலவில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், 60 கோடி ரூபாய் செலவில் அறிவுத்திறன் வகுப்பறைகள் மற்றும் நடப்பாண்டில் 391 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
வீடுகட்டுவதற்கு ஆணை
அதேபோல, வீட்டுவசதி திட்டத்தின் மூலமாக இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏழை, எளியோருக்கு வீடுகட்டுகின்ற அற்புதமான திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகின்றது. அம்மாவினுடைய அரசு, இந்தத் திட்டத்தில் கவனம் செலுத்தி விண்ணப்பத்த ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் வீடுகட்டுவதற்கு ஆணை வழங்குகின்ற அரசு அம்மாவினுடைய அரசு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். நம்முடைய பிரதமர் , இராமேஸ்வரம் கூட்டத்தில் பேசியபொழுது தமிழ் நாட்டிற்கு எத்தனை இலட்சம் வீடுகள் வேண்டுமானாலும் நான் தருகின்றேன் என்று பேசினார்.
போர்க்கால அடிப்படையில் ....
நெசவாளிகளுக்கு விலையில்லா மின்கட்டண சலுகை, விசைத்தறி தொழில் செய்பவர்களுக்கு மின்கட்டண சலுகை, வறட்சி காலங்களில், கால்நடைகளுக்கு குறைந்த விலையிலே பசுந்தீவனம் அம்மாவினுடைய ஆட்சியில் வழங்கப்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியினர் பல்வேறு கூட்டங்களில் இந்த அரசு நாட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கின்றது என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அனைவருக்கும் தெரியும். பருவமழை பொய்த்ததின் காரணமாக, தமிழகத்திலே 140 ஆண்டு காலம் இல்லாத கடும் வறட்சி. அணைகளில், குளங்களில், ஏரிகளில் நீர் கிடையாது. நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழ் சென்று விட்டது. எனவே, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு, அம்மாவினுடைய அரசு தேவையான நிதியுதவி செய்து, போர்க்கால அடிப்படையில் எடுத்து, அதனை தீர்த்த அரசு அம்மாவினுடைய அரசு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
33,139 திட்டப்பணிகள் ...
அம்மாவுடைய ஆசியோடு, இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 15.8.2017 வரை மாநிலம் முழுவதும் 6872 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 33,139 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 1114 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4199 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்துள்ளது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். 2016-17-ஆம் ஆண்டில், 22,71,000 மக்கள் பயன்பெறும் வகையில் 960 கோடியே 33 லட்சம் ரூபாய் 24 கூட்டுக் குடிநீர் திட்டங்கள். மணல் குவாரிகளை அரசே இன்றைக்கு ஏற்று, நடத்தி வருகின்றது. அம்மாவினுடைய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. அம்மா தேர்தல் நேரத்திலே கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்குவேன் என்று குறிப்பிட்டவாறு, இன்றைக்கு அம்மாவினுடைய அரசால், ரூபாய் 12,000-லிருந்து ரூபாய் 18,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மகப்பேறு சஞ்சீவி திட்டம்
இந்தியாவில், தமிழகத்தில் மட்டும் தான், அம்மா, கருவுற்ற ஏழைப் பெண்களின் குழந்தைகள் நன்றாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதற்காக, சிந்தித்து, சிந்தித்து, அம்மாவினுடைய சிந்தனையிலே உதயமான அற்புதமான, உன்னதமான திட்டம் அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள். குழந்தைகள் பிறந்தவுடனே நலத்திட்ட உதவிகள் பெறுகின்ற ஒரே அரசு, அம்மாவினுடைய அரசு தான்.
எம்.ஜி.ஆர் ஆட்சியிலும், அம்மா ஆட்சியிலும் முழுக்க, முழுக்க ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டம், ஏழைகளுக்கு பொருளாதாரத் தடை நீக்கி, நேசக்கரம் நீட்டி, ஏழைப் பெண்களின் குடும்பத்தை வாழவைக்கும் தாலிக்குத் தங்கம் வழங்குகின்ற திட்டம் - 4 கிராம் தங்கத்திலிருந்து 8 கிராமாகவும், திருமண உதவித் திட்டம் - ரூபாய் 25000-லிருந்து ரூபாய் 50000-ஆகவும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில், தமிழ்நாட்டில் மட்டும் தான் அம்மாவினுடைய அரசு உயர்த்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை இரட்டிப்பாக்கி, கடந்த 6 மாத காலத்தில் மட்டும் 57000 பயனாளிகளுக்கு ரூபாய் 13 கோடி வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைக்கு மாற்றாக, ஸ்மாட் கார்டு திட்டம் அம்மாவினுடைய அரசிலே செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
எவராலும் பிரிக்க முடியாது
ஏதாவது தொல்லை கொடுப்பதற்காக ஒரு சிலர் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது எம்.ஜி.ஆரால் உருவவக்கப்பட்ட அ.தி.மு.க. இன்றைக்கு எதிரிகளால் பல்வேறு சங்கடங்களை அனுபவித்து, சோதனைகளை சந்தித்து, இந்த இயக்கத்தை தமிழ்நாடு மக்களின் மனத்தில் மேம்படச்செய்து, தமிழர்களின் இதயத்தில் 11 ஆண்டுகாலம் நல்லாட்சி தந்தவர் எம்.ஜி.ஆர். அம்மா பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து, பல்வேறு சோதனைகளை சந்தித்து, ஏச்சுக்கள், பேச்சுகள் அனைத்தையும் சந்தித்து, வெற்றி கண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், வசதிபடைத்த மக்கள் அனுபவிக்கும் வசதிகளை, ஏழை, எளிய, நடுத்தர மக்களும் பெறவேண்டுமென்று மக்களின் ஆட்சி நடத்தியவர், மக்களின் இதயங்களில் இடம்பெற்றவர் அம்மா. இருபெரும் தலைவர்களின் ஆசியாலும், ஆன்மாவாலும் நடைபடுத்தப்படுகின்ற இந்த அரசு, மற்றும் அம்மாவின் ஆன்மா எங்கள் பக்கம் பலமாக இருக்கும் வரை எவராலும் இந்த ஆட்சியையும், கட்சியையும் மக்களின் இதயத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது, ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.
பல திட்டங்கள் ....
இந்த அரசு ஊழல் அரசு என்று பேசுகின்றார்கள். நேற்று வரை எங்களோடு இருந்தார்கள், ஆட்சியில் பங்கெடுத்தார்கள். திடீரென்று, இன்று எப்படி ஊழல் அரசு என்று குற்றம் சாட்டுகின்றார்கள் என்று அவர்களுக்குத் தான் தெரியும், அவர்களுடைய மனசாட்சிபடியே நாங்கள் விட்டுவிடுகின்றோம். சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். அம்மாவினுடைய அரசால் சில திட்டங்கள் இன்றைக்கு நடைமுறைபடுத்தப்பட்டது. மேலும், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டுமென்ற கோரிக்கையும் அரசினுடைய பரிசீலனையில் இருக்கின்றது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார