எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்த நாளாக விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படு கிறது. விநாயகர் முழு முதற்கடவுளாகவும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை உடனே நிறைவேற்றும் எளிமையானவராக கருதப்படுகிறார். மஞ்சள்பொடி, வெல்லம், களிமண், வெள்ளெருக்கவேர், சந்தனம் மற்றும் சாணம் முதலானவற்றில் கூட விநா யகரை உருவாக்கி பூஜைகள் செய்து விடலாம். விநாயகரை வழிபடுவது மிகவும் சுலபமானதும் அவரை திருப்திப்படுத்துவதும் மிகவும் எளிதானதாகும். தேடி வந்து வழிபட்டால் ஓடிவந்து வினைகள் தீர்ப்பார் விநாயகப் பெருமான். விநாயகரை இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, சீனா, நேபாளம், கிரேக்கம், எகிப்து, கயா, ஜாவா மற்றும் பர்மா போன்ற நாடுகளிலும் இந்திய மக்களால் வழிபாடு நடத்தப் படுகிறது.
ஒரு முறை பார்வதிதேவி குளிக்கச் செல்லும் முன் தன்னுடைய அழுக்கை ஒன்று திரட்டி ஒரு சிறுவனை படைத்து, அவனை காவலுக்கு நிறுத்தி வைத்து ஒருவரையும் உள்ளே அனுமதிக்காதே! என்று கட்டளையிட்டு குளிக்கச் சென்றா ராம். அதுசமயம் சிவபெருமான் வர, அவரை அச்சிறுவன் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டான். இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இறுதியில் சிவபெருமான் அச்சிறு வனின் தலையை துண்டித்து விட்டாராம். அந்த சமயம் அங்கு வந்த பார்வதிதேவி மிகவும் வருத்தமடைந்தார். தன்னிலிருந்து உருவான அச்சிறுவன் தன்னுடைய குழந்தை போன்றவன் என்று கூற, உடனே சிவபெருமான் அதற்கு வருந்தி அச்சிறுவனுக்கு உயிர் கொடுக்க முன்வந்தார். உடனே தனது பூத கணங்களை அழைத்து அச்சிறுவனின் தலையை தேட ஆணையிட்டார். ஆனால் அச்சிறுவனின் தலை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே வடக்கு திசை நோக்கி உறங்கிக் கொண்டிருக்கும் பாலகனின் தலையை கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டார். ஆனால் அந்த பாலகனின் தாய் வேறு திசை நோக்கி உறங்கியிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஆனால் பூத கணங்கள் எங்கு தேடியும் வடக்கு திசை நோக்கி யாரும் உறங்கவில்லை. ஆனால் ஒரு சிறு யானை மட்டும் வடக்கு திசை நோக்கி உறங் கிக் கொண்டிருந்தது. அதன் தாய் வேறு திசை நோக்கி உறங்கியது. இதனைக் கண்ட பூத கணங்கள் அந்த யானையின் தலையை வெட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். உடனே சிவபெருமான் அச்சிறுவனின் உடலின் மீது பொருத்தி மந்திரங்கள் ஜெபித்து உயிர் கொடுத்தார். அவ்வாறாக அச்சிறுவன் விநாயகராக பெயர் கொண்டான்.
விநாயகர் சதுர்த்தியன்று பூஜையறையில் ஒரு பலகையை வைத்து அதன் மீது கோல மிட்டு, அதன் மீது தலை வாழை இலையினை விரித்து, அதன் மேல் பச்சரியை பரப்பி, அதன் நடுவில் விநாயகரை வைப்பார்கள். விநாயகருக்கு வண்ணக்குடை அணிவித்து, எருக்கம்பூ மாலை அணிவிப்பர். அருகம்புல், மல்லி, அரளி போன்ற மலர்களைத் தூவி அர்ச்சனை செய்வர். விநாயகருக்கு விருப்பமான கொலுக்கட்டை, பொரி, அவல், சுண்டல், அப்பம், கரும்பு, கொய்யா போன்ற உண வுப் பொருட்கள் படைத்து வணங்குவர்.
விநாயகருக்கு அருகில் ஒரு சொம்பு வைத்து, அதில் மாவிலை, தேங்காய், பூ போன்றவற்றை கொண்டு கும்பம் வைப்பார்கள். பிறகு விநாயகருக்கு படையலிட்டு வணங்குவார்கள். அவருடைய மூல மந்திரத்தை 51 முறை சொல்லி வழிபடுவார்கள். அன்று முழுவதும் பகலில் விரதம் இருந்து மாலையில் சந்திரனைப் பார்த்துவிட்டு விநாயகரை வணங்குவார்கள். அப்படி செய்தால் தான் விரதம் முழுமையடையும்.
விநாயகரை மூன்று நாட்கள் வீட்டில் வைத்து வழிபட்டு பின் கடலில் சென்று கரைத்து விடுவர். இந்தியா முழுவதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. அகத்தியர், மகாமுனி காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்த போது, விநாயகப் பெருமான் மக்களுக்கு பயன்பட வேண்டிய நீரை கமண்டலத்தில் அடைத்து வைத்துள்ளதை கவனித்தார். அது சமயம் அகத்தியர் மகாமுனி கமண்டலத்தை கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்களை முடிக்கச் சென்ற போது, விநாயகர் அங்கே அந்தணச் சிறுவனாக தோன்றி கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். அப்போது காவேரி தரணி எங்கும் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. அதைப் பார்த்த அகத்தியருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அடைத்து வைத்த காவேரியை அச்சிறுவன் பூமியில் ஓடவிட்டு விட்டானே என்று கோபமுற்று, அச்சிறு வனை அடிக்கத் துரத்தினர். அகத்தியருக்கு அகப்படாமல் போக்கு காட்டி ஓடி விட்டு, பின்பு மாட்டிக் கொண்டான். அப்போது அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்ட முற்பட்டபோது, அவன் உடனே விநாயகனாக உருமாறினார். பின்பு அகத்தி யர் தன் தலையிலேயே கொட்டிக் கொண்டார். குட்ட நினைத்து தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகிறார். மக்களின் பயனுக்கு உள்ள காவேரியை இப்படி கமண்டலத்தில் அடைத்து வைக்கலாமா என்று விநாயகர் வினவ, அகத்தியரும் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரினார்.
முன்பு ஒரு சமயம் திரிபுரர்கள் என்றழைக்கப்பட்ட மூன்று அசுரர்கள் கடும் தவம் புரிந்து பறக்கும் தன்மை கொண்ட மூன்று கோட்டைகளைப் பெற்று, தவவழிமையால் கிடைத்த அபூர்வ சக்தியால் மனச்செருக்குற்று, தேவர்களை துன்புறுத்தத் தொடங்கினர். அதுசமயம் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் அந்த அசுரர்களை அழிக்க மனமுவந்தார். அப்போது நான்கு வேதங்களும் புரவிகள் ஆக, சூரிய சந்திரர்கள், சக்கரங்கள் ஆக, நான்முகன் சாரதியாக, அனைத்து தேவர்களும் போர் கருவிகளாக, சிவபெருமான் திருத்தேரில் போருக்கு தயாரானார். சிவபெருமான் கட்டளைக்கு இணங்க நான்முகன் தேரை செலுத்த முற்பட்டபோது தேர் சக்கரங்களின் அச்சு முறிந்து போர் பயணம் தடைபட்டது. சிவபெருமான் புன்முறுவலுடன் விநாயகரை வணங்காமல் போருக்கு புறப்பட்ட காரணத்தை நான்முகனுக்கு உணர்த்தினார். உடனே தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விநாயகரை வணங்கி துதி பாடினர். திரிபுர சம்ஹாரம் விக்கினமின்றி நிகழ ஆசி வேண்டி நின்றனர். தன்னை வேண்டி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அருள்புரியும் விநாயகப் பெருமான் அவர்களுக்கும் தயவு கூர்ந்து ஆசி வழங்கினார்.
விநாயகருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம், வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலின் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் இருக்கும் மனத்தைப்போல், வெளியே வெறும் மாவாகச் காட்சியளித்தாலும் உள்ளேயிருக்கும் பூரணம் இனிப்பாக இருப்பதைப் போல் நம் வாழ்விலும் இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர். எவ்வாறு வெறும் அரிசி மாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்.
விநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவ ருக்குப் பிரசாதமாக அவல், பொரி கொடுத்தால் கூடப்போதும், இல்லை தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லை பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்கு சாற்றினால் கூட போதும் அவரை மனம் குளிர செய்து விடலாம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள் அந்த தினங்களில் செவ்வரளி, மற்றும் மஞ்சள் அரளி மலர்களை மாலை தொடுத்து வணங்குவது மிகவும் சிறப்பு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.