எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வரும் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ கூட்டாக தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மலர் தயாரிப்புக்குழுவின் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசைப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய இந்த விழா காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாமக்கல், என பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்டந்தோறும் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டில்லியில் பலமுறை சந்தித்திருக்கிறார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வரும் டிசம்பரில் சென்னையில் நடைபெறும் நிறைவு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உறுதியாக பங்கேற்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, சகலை போன்றவர்கள் மீது பல வழக்குகள் இருக்கிறதென்றும், அதன் காரணமாக சிறையில் சசிகலாவை சந்திக்க பயந்ததாக தினகரன் கூறியிருக்கிறார். இது தவறான இட்டுக்கட்டிய கற்பனையாகும். எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி கர்நாடகத்தில் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். கர்நாடகத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள பணிகளை மேற்கொண்டு வருகிறார். அது குறித்து வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எந்த வழக்கும் இல்லை.
பதவி பிரமாணம் மேற்கொண்ட பிறகு, தண்டனை பெற்ற ஒருவரை சிறையில் சென்று சந்திக்க கூடாது என்பது மரபு, அதன் அடிப்படையில் தான் சிறைக்கு சென்று சசிகலாவை முதல்வர் எடப்பாடி சந்திக்கவில்லை. இந்த நிலையில் பொய்யான தகவலை தினகரன் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. தனக்கு நேர்ந்த தோல்விகளால், கையாளாக தனத்தின் காரணமாக தினகரன் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதேபோன்று பேசினால், நாங்களும் சில செய்திகளை வெளியிட வேண்டி வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் வெளியிட்ட தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது. அதன் மீது கருத்து சொல்வது சட்டவிரோதமாகும். சபாநாயகர் மேற்கொண்ட முடிவை விமர்சனம் செய்ய முடியாது. அதன் மீது கருத்து சொல்லவும் முடியாது. நாங்கள் தாயாய் கருதிய முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிர்ச்சியில் இருந்த நாங்கள் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலாவை தற்காலிகமாக தேர்ந்தெடுத்தோம். இப்போது எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையை, தேர்ந்தெடுத்திருக்கிறோம். இரவல் தலைமையை தேர்ந்தெடுக்கவில்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தினகரன் தான் 60 நாட்களில் கட்சியை இணைக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இப்போது நாங்கள் இணைந்து விட்டோம். தினகரன் இதில் என்ன குறை கண்டார். நாங்கள் ஒன்று சேர்ந்ததில் என்ன தவறு கண்டார் என்று அவர் கேட்டார்.
அமைச்சர்கள் மீது தினகரன் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இருந்தால் சொல்லவேண்டும். கட்சியிலும் ஆட்சியிலும் இல்லை என்பதால் பொத்தாம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடாது. சசிகலாவின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்களானதாக தினகரன் கூறுகிறார். அது தவறு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால் அவரது தலைமையை ஏற்ற ஒன்றரை கோடி தொண்டர்களின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்களானோம். அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர் ஜெயலலிதா தான். அமைச்சரவையில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஆட்சிக்கு முழு பொறுப்பாளர் ஜெயலலிதா தான். அவர் தான் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து இந்த ஆட்சியை வரவழைத்தவர். அ.தி.மு.க.வுக்காக எந்த இடத்திலும் தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எனவே அ.தி.மு.க.வுக்கு சொந்தம் கொண்டாட தினகரனுக்கு தார்மீக உரிமையில்லை.
இது அம்மாவின் வழிவந்த அரசல்ல என்று தினகரன் கூறுகிறார். அவர் கடந்த பத்தாண்டுகாலமாக அரசியல் துறவறம் மேற்கொண்டிருந்தார். வனவாசம் போயிருந்தார். எனவே அவருக்கு அம்மாவின் அரசை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இரட்டை இலையை மீட்க தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் கமிஷனுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரே நாளில் தீர்ப்பு வந்து விடாது. இது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள் அது சத்திய வாக்கு, அந்த வாக்கை கண்டிப்பாக இருவரும் நிறைவேற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.