முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை தடுப்பு சாதனத்தை நிறுவியது ஜப்பான் ராணுவம்

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

டோக்கியோ : வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஜப்பான் ராணுவம் ஹோக்காய்டோ தீவில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனத்தை நிறுவியுள்ளது.

வடகொரியா அடுத்தடுத்து 2 முறை ஏவிய ஏவுகணைகள் ஜப்பான் வான் பரப்பை கடந்து சென்றன. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பானின் ஹோக்காய்டா தீவில் அந்த நாட்டு ராணுவம் நேற்று அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனத்தை நிறுவியது. ஜப்பானின் ராணுவ பலமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் தலைவர்கள் சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது வடகொரியாவை எதிர்கொள்வது குறித்து புதிய வியூகம் வகுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனிடையே ராஜ்ஜிய ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க வடகொரிய தூதர்களைப் பல்வேறு நாடுகள் வெளியேற்றி வருகின்றன. அந்த வரிசையில் ஸ்பெயினுக்கான வடகொரிய தூதர் நேற்று வெளியேற்றப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து