எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையின மக்களுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (21.09.2017) சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர்.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.3,386ஃ- தையல் இயந்திரத்தினையும், 1 பயானிளக்கு மாதாந்திர உதவித்தொகை;கான ஆணையினை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர்.மா.வள்ளலார், வழங்கினார்.
இக்கூட்டத்தில், சிறுபான்மையின மக்களுக்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக(டாம்கோ)த்தின் மூலம் வழங்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள்; கடனுதவி, தனிபர் கடனுதவி, கல்விக்கடனுதவிகள் குறித்தும், பள்ளி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாணவ, மாணவியர்களின் சிறுபான்மையினர் நல 6 விடுதிகளின் செயல்பாடுகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், முஸ்லீம் மகளிர் உதவும் சங்க செயல்பாடுகள் குறித்தும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், முன்னிலையில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு சிறுபான்மையினர் மக்களின் கல்வி, சமூகம், மற்றும் பொருளாதார நிலைகளை பெரும்பான்மையினருக்கு நிகராக மேம்பாடு செய்திடும் நோக்கத்திலும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட பல்வேறு அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் (டாம்கோ) சார்பில் தனிநபர் கடன் திட்டம், சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் திட்டம், கல்வி கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு விடுதிகளில் தங்கி பயிலுவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் 6 விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த பெண்களுக்க முஸ்லீம் மகளிர் உதவு சங்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சிறுபான்மையின இளைஞர்களுக்கு கணினி, கைபேசி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்களுக்கு கடனுதவி வழங்கிட வேணடும். சிறுபான்மையின மக்கள்; வசிக்கின்ற பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மையின விவசாயிகள் விவசாய பொருட்களை விளை பொருட்களாக மாற்றி இதன்மூலம் அதிக வருவாயை ஈட்டிட வேண்டும். எனவே, சிறுபான்மையின மக்களுக்காக அரசின் நலத்திட்டத்திட்டங்கள் அவர்களை சென்றடைய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் முனைவர்.மா.வள்ளலார் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.செ.பொன்னம்மாள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துகுமாரசுவாமி உயர் கல்வித்துறை இணை இயக்குநர் கூடலிங்கம் மகளிர் திட்ட அலுவலர் கல்யாண சுந்தரம் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் தி.இரா.ஆனந்தி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தி.அபிதாஹனீப் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி மதுரை மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் செந்தில்குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் தி.இராஜராஜேஸ்வரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வைத்தியலிங்கம் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் வெங்கடரமணா மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் பொன்ராஜ் கொந்தாளம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத