எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பாரா விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற வீரர் யு.செல்வராஜ் கனடா நாட்டின் டோராண்டோ மாநகரில் நடைபெற்ற உயரம் குன்றியவர்களுக்கான 7வது உலக தடகள போட்டியில் பங்கேற்று ஈட்டி எறிதல் பிரிவில் 26.54 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்த இவருக்கு அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்துகையில் கிராமத்தில் பிறந்த செல்வராஜ் உயரத்தில்; குறைவானவராக இருந்தாலும் சாதனையில் உயர்ந்து நிற்கின்றார். இவர் உலகளவில் சாதனை படைப்பதற்கு அழகப்பா பல்கலைக்கழகம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டே அழகப்பா பல்கலைக்கழக பாரா மையம் தோற்றுவிக்கப்பெற்றது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற செல்வராஜ் அந்த குறிக்கோளை நிறைவேற்றியுள்ளார். இந்த மையத்தில் மொத்தம் 45 தடகள வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் வருங்காலங்களில் நடைபெற விருக்கும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறக்கூடிய திறமை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இவருக்கும் இவரைப் போன்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் உதவி செய்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மதுரை தென்னக இரயில்வே தலைமை முன்பதிவு அதிகாரி ஆசியன் தங்கப் பதக்கம் பெற்ற திருமதி உ.பாண்டீஸ்வரி தமது வாழ்த்துரையில் விளையாட்டுத் துறை தான் என்னை உங்களிடம் அடையாளம் காண்பித்தது. காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நான் என் தந்தையின் பெரும் முயற்சியோடு தினசரி மிதிவண்டி ஓட்டியதாலும்; ஓட்டப்பயிற்சி மேற்கொண்டதாலும்; எனது நோய் முழுவதுமாக நீங்கியது. நான் தேசிய அளவில் சாதனை நிகழ்த்த முடிந்தது. அந்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. உண்மையாக உழைத்தால் உயர்வு நிச்சயம். மண்ணை நேசித்தவர்கள் எப்போதும் வீணாவதில்லை. எல்லோரிடமும் நிச்சயமாக ஒரு திறமை இருக்கும் அவற்றை தெரிந்து நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் சமூக வலைதளங்களை விட்டு வெளிவரவேண்டும். உலகில் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை. அவர்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. விளையாட்டு படிப்பு திறமை எல்லாம் நிறைவாக இருக்கிறது. நாம் இவற்றை பயன்படுத்தி உயர வேண்டும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு.மீனா தமது சிறப்புரையில் கல்வி, கலை, விளையாட்டு இந்த மூன்றிலும் சிறந்து விளங்குபவர்கள் வாழ்க்கையில் சாதனையாளர்களாக உருவாக முடியும். அழகப்பா பல்கலைக்கழக பாரா மைய வீரர் செல்வராஜ் உலகளவில் நடைபெற்ற பாரா விளையாட்டு தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நடத்தப்பெறும் இந்த பாராட்டு விழா வரலாற்று சிறப்பு மிக்க விழாவாகும் என்றார். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயராக இருக்கிறார்கள். படிப்போடு குழந்தைகளுக்கு உடற்பயிற்சியும் அவசியம். இன்றைய சூழ்நிலையில் நவீன தொழில் நுட்ப வளர்ச்சி சாதனங்களை மாணவர்கள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சியையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சி எடுத்துக்கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள்; சார்பாக முனைவர் சு.இராசாராம் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக ஆராய்ச்சி முதன்;மையர் முனைவர் த.ரா. குருமூர்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.சுந்தர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
இந்தியா - பாக். மோதல் யாருடைய தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
17 Sep 2025ஐதராபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதல் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டாலும் நிறுத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்