எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தாவரவியல் ரீதியாக அசோலா ‘அசோலேசியே’ என்னும் குடும்பத்தை சார்ந்த தண்ணீரில் மிதக்கும் ஓர் பெரணி செடி ஆகும். அசோலாவின் இலைகள் முக்கோண வடிவிலோ அல்லது பலகோண வடிவத்திலோ அமைந்து பார்ப்பதற்கு மூக்குத்தி மற்றும் கம்மல் போன்று இருப்பதால் இதனை மூக்குத்தி செடி அல்லது கம்மல் செடி என ஊர்புறங்களில் அழைக்கப்படுவதுண்டு. அசோலா மிகச்சிறிய இலைகளையும் மெல்லிய வேர்களையும் கொண்டது.
இதன் தண்டு மற்றும் வேர்ப் பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். அசோலாவின் உள்ளே ‘அனபினா அசோலே’ என்ற நீலப்பசும்பாசி உள்ளது. நீலப்பசும்பாசி வளர்வதற்கு தேவையான உண வினை அசோலா கொடுக்கிறது. இந்த நீலப்பசும்பாசி காற்றில் உள்ள தழைச் சத்தினை (நைட்ரஜன்) கிரகித்து அசோலாவில் சேமித்து வைக்கிறது. இதனால் அசோலா கால்நடைகளுக்கு புரதம் நிறைந்த சத்தான உணவாக பயன் படுத்தப்படுகிறது.
அசோலாவின் தனிச்சிறப்புகள்
1. அசோலாவை எளிய முறையில் உற்பத்தி செய்யலாம். துரித வளர்ச்சித் திறனும் கொண்டது.
2. அசோலாவை பசுமையாகவோ அல்லது உலர்த்தியோ கால்நடைகள் மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.
3. அசோலாவில் 25-35 சதவீதம் புரதச்சத்து 10-12 சதவீதம் தாதுக்கள் மற்றும் 7-10 சதவீதம் அமினோ அமிலம் மற்றும் இதனை சார்ந்த வளர்ச்சிதை மாற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.
4. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குiவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால் நடைத் தீவனமாக விளங்குகிறது.
5. அசோலா கால்டை மற்றும் கோழிகளின் உடல் நலத்திற்கு அவசியமான அமினோ அமிலங்களை கணிசமான அளவில் உள்ளடக்கி இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
அசோலா உற்பத்தி முறை : அசோலா குறைந்த வெப்பநிலையில் (25 முதல் 31 சென்டிகிரேட்) வளரும் தன்மை கொண்டதால் நிழலில் வளர்க்க வேண்டும். மர நிழலில் வளர்க்கும் போது சூரிய ஒளியானது அசோலா மீது மூன்று மணி நேரத்திற்கு மேல் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
படி-1: நிலத்தில் உள்ள களைச்செடிகளை அகற்றி நிலத்தைச் சமப்படுத்த வும் பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி 10. செ.மீ. உயரம். 2.25 மீ நீளம், 1.5 மீ அகலம் வரும்படி செங்கலை அடுக்கவும். புல் பூண்டுகள் வளர்வதை தடுக்கவும், சிறு கற்களால் சில்பாலின் சீட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் யூரியா சாக்கினை குழியில் பரப்பவும்.
படி- 2: பின்னர் 2.5 மீ நீளம், 1.8 மீ அகலம் உள்ள சில்பாலின் சீட்டை செங்கலின் மேல் சமமாக பரப்பவும். (150 தடிமன்களுக்கு மேல் உள்ள சில்பாலின் சீட்டை பயன்படுத்தவும்).
படி-3: சில்பாலின் மீது சுமார் 30-35 கிலோ நன்கு சலித்த வளமான மண்ணை சமமாக பரப்பவும்.
படி-4: இருநாட்களுக்கு முந்தையதாக இல்லாத சாணம் சுமார் 4-5 கிலோ அல்லது அதே அளவான சாண எரிவாயுக்கலனில் இருந்து வெளிவரும் கழிவை, 15-20 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்ற வேண்டும். பின்னர் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை தண்ணீர் கரைத்து குழியில் ஊற்ற வேண்டும்.
படி-5: அசோலா குழியில் 10 செ.மீ உயரம் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். இரசாயன கழிவுகள் இல்லாத கழிவுநீர் மற்றும் மாட்டுத் தொழுவத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரையும் அசோலா வளர்ப்பதற்கு பயன்படுத்தலாம்.
படி-6: சுமார் 1-1.5 கிலோ நோய் இல்லாத, பூச்சித்தாக்குதல் இல்லாத அசோலாவை (இதை விதை அசோலா என சொல்லலாம்) எடுத்து தண்ணீரின் மேல் எல்லா இடங்களிலும் சமமாக பரவும்படி தூவவும். ஒரு சில அசோலா பெரணிகள் தலைகீழாக விழுந்து இருந்தால் அவற்றின் மேல் சிறிதளவு நீரை தெளித்தால் போதும். அவை நேராகி விடும்.
படி-7: அசோலா விதைத்த 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும். நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை தினந்தோறும் அறுவடை செய்யலாம்.
பராமரிப்பு:- தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும், ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 10 கிராம் சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து குழியில் ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலி;த வளமான மண்ணை இட வேண்டும். அசோலா விதைகளை தவிர ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து இருபொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.
அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்:- 1 சதுர செ.மீ. துளை உள்ள பிளாஸ்டிக் டிரே கொண்டு அரித்து எடுத்த அசோலாவை பாதியளவு தண்ணீர் கொண்ட பிளாஸ்டிக் பக்கெட்டினுள் போடவும். பின்னர் சாணத்தின் வாசனை போகும் அளவு நன்றாக கழுவவும். அசோலாவை கழுவ பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் அசோலா பாதியிலேயே விட்டு விடலாம்.
இவ்வாறு நன்கு கழுவிய அசோலாவை 1:1 என்ற விகிதத்தில் செயற்கை தீவனங்களோடு கலந்து கால்நடைகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்கலாம். கோழி களுக்கு அசோலாவை அப்படியே உண்ண கொடுக்கலாம். இருந்தாலும் நாம் எப்போதும் கொடுக்கும் தீவனங்களோடு சேர்த்து கொடுக்க ஆரம்பித்து அவை பழக பழக தீவன அளவை குறைத்து அசோலா அளவைக் கூட்டிக்கொண்டெ வரலாம். கால்நடைகள் அசோலாவை நன்கு சாப்பிடப் பழகிய பின்னர் செயற்கைத் தீவ னங்கள் சேர்க்காமலேயே நேரடியாக அசோலாவையே கொடுக்கலாம்.
பரிந்துரைக்கப்படும் அசோலாவின் அளவுகள் : கால்நடை ஒன்றிக்கு அசோலாவின் அளவு (நாள் ஒன்றுக்கு), பசுமாடு, உழவுமாடு -1.5 - 2 கிலோ, முட்டை மற்றும் இறைச்சி கோழி, வான்கோழி 20-30 கிராம், ஆடு -300-500 கிராம், வெண்பன்றி 1-1.5 கிலோ, முயல் 100 கிராம்,
பயன்கள் : கறவை மாடுகளில் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்ப துடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலில் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல்லாத திடப்பொருளின் அளவும் 3 சதவீதம் வரை கூடுகிறது.
அசோலா உட்கொள்ளும் கால்நடைகள் மற்றும் கோழிகளின் எடை கூடுகிறது. கோழிகளின் முட்டையில் உள்ள மஞ்சள் கரு திடமாக காணப்படும்.
கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு அசோலாவை தீவனமாக அளிக்கும் போது 20 விழுக்காடு வரை அடர் தீவனத்தை சேமிக்கலாம்.
அசோலாவில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு : பொதுவாக அசோலாவை பூச்சி மற்றும் நோய்கள் அதிகம் தாக்குவதில்லை. பாத்திகளில் அசோலாவின் அடர்த்தி அதிகமானால் பூச்சி மற்றும் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பொதுவாக பூச்சித் தொல்லை வந்தால் 5 மி.லி. வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அசோலா பாத்தியில் தெளிக்க வேண்டும்.
தொகுப்பு : ஜெயந்தி, ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி, சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.