முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் மராத்தான் ஓட்டப் போட்டி

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 கொடைக்கானல்-- கொடைக்கானலில் கல்லூரி மாணவிகளுக்கான மராத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது.
 கொடைக்கானலில் வன விலங்கு வாரா விழா நடந்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக கொடைக்கானல் வனத்துறை சார்பில் ஏரிச்சாலையில் நடந்த இந்த மராத்தான் ஓட்டப்பந்தயப் போட்டியில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வன உயிரினங்களை காப்பது பற்றிய உறுதி மொழி எடுக்கப்பட்டது. மராத்தான் போட்டியினை தமிழ்நாடு ரோயிங் பெடரேசன் செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். கொடைக்கானல் கௌரவ வனவிலங்கு பாதுகாவலர் ராஜகோபல துரைராஜா முன்னிலை வகித்தார். கொடைக்கானல் வன சரக பேரிஜம் ரேஞ்சர் கிரு~;ணசாமி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரோஞ்சர்கள் ஆனந்த குமார், உஸ்மான் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கொடைக்கானல் பழனி மலை பாதுகாப்பு சங்க செயலாளர் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஓட்டப் போட்டியில் கல்லூரி மாணவிகள் யுவராணி, மணிமேகலை, ஐஸ்வர்யா, சுஜாதா, லோகேஸ்வரி ஆகியோர் பரிசு பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து