எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், ஈரோடு மற்றும் பவானி வட்டங்களில் உள்ள அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி திட்ட வாய்க்கால்களின் வழியாக முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 5.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இன்று (05.10.2017) தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டார்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து விவசாயிகளின் நலன் கருதி பழைய பாசன பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்கள், காலிங்கராயன் வாய்க்கால், புதிய பாசனப் பகுதியான கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளும் என 4 வாய்க்கால்களிலும் முதல் முறையாக ஒரே நாளில் அதிகாலை 5.00 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு வடகிழக்கு பருவமழை மூலம் எதிர்பாக்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர்த்தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு முறை வைத்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது பழைய பாசனப்பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக 1100 கனஅடியும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடியும், மொத்தம் 1700 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. புதிய பாசனப்பகுதியான கீழ்பவானி பாசனத்திட்டத்திற்கு கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் 500 கனஅடி அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 2300 கன அடி வரை தண்ணீர் வழங்கப்படும்.
பழைய பாசனப்பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர் ஆகிய வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களில் உள்ள 15,746 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கீழ்பாவனித் திட்ட பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
இன்று அக்டோபர் 5 தண்ணீர் திறக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 24 வரை 20 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் 10 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும் என்ற அடிப்படையில் நான்கு முறை நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி மொத்தம் 80 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு 40 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜூன், சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), உ.தனியரசு (காங்கேயம்), பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை (ஈரோடு) எம்.குழந்தைசாமி, செயற்பொறியாளர் (பவானிசாகர் அணை) செந்தில்வேலன், கண்காணிப்பு பொறியாளர் எஸ்.நடராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
தமிழகத்தில் விருதுநகர், மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Nov 2025சென்னை : தமிழகத்தில் சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிடட் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்
22 Nov 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
பொறுப்பு டி.ஜி.பி. விவகாரம்: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
22 Nov 2025புதுக்கோட்டை, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:- பொறுப்பு டி.ஜி.பி.
-
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
22 Nov 2025சென்னை, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்த
-
'டெட்' தோ்வு விவகாரத்தில் ஆசிரியர்களை தி.மு.க. மாடல் அரசு கைவிடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Nov 2025சென்னை : ஆசிரியர்களை திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்று பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
22 Nov 2025பெங்களூரு : தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை
22 Nov 2025சேலம் : சேலம் மாவட்டத்தில் நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் இதுவரை 100 தொகுதிகளின் தி.மு.க. நிர்வாகிகளை நேரில் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Nov 2025சென்னை, உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் இதுவரை 100 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பை நிறைவு செய்துள்ளார் தி.மு.க.
-
மம்தானி சிறப்பாக பணியாற்றுவார்:நியூயார்க் மேயருக்கு ட்ரம்ப் பாராட்டு
22 Nov 2025வாஷிங்டன் : மம்தானிக்கும் தனக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
கோவை, மதுரை மெட்ரோ தொடர்பான தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை மீண்டும் பரிசீலனை செய்து நடைமுறை படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
22 Nov 2025சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, தமிழ்நாட்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்
-
மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கவர்னருக்கு சம்மட்டி அடி அடிப்பது போல் உள்ளது: அமைச்சர் கோவி செழியன் பேட்டி
22 Nov 2025தஞ்சாவூா், மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கவர்னருக்கு சம்மட்டி அடி அடிப்பது போல் உள்ளது என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-11-2025.
23 Nov 2025 -
சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய கஞ்சா வியாபாரி சுட்டுப்பிடிப்பு
23 Nov 2025கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டார்.
-
கடலூர் கனமழையால் விபரீதம்: மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
23 Nov 2025கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கனமழையால், மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
137 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் : விவசாயிகள் மகிழ்ச்சி
23 Nov 2025கூடலூர் : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து நேற்று காலை 137 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1 முதல் பார்வையிடலாம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Nov 2025கோவை : கோவையில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும், டிசம்பர் 1-ம் த
-
துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் கலெக்டர் மரியாதை
23 Nov 2025கோவை : கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்ட துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிக
-
ஏன் விஜயை தொட்டோம் என நினைத்து வருந்த போகிறீர்கள் : காஞ்சிபுரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
23 Nov 2025காஞ்சிபுரம் : ஏன் இந்த விஜயை தொட்டோம், ஏன் விஜயுடன் உள்ள மக்களை தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்தப் போகிறீர்கள் என்றும், மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள்
-
ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்: தனது அமைதி திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு ட்ரம்ப் மிரட்டல்
23 Nov 2025நியூயார்க் : ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை உக்ரைன மேற்கொள்ள தனது அமைதி திட்டத்தை ஏற்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
23 Nov 2025ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது.
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேரணி
23 Nov 2025சென்னை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.பி.எஸ்.
-
மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் இ.பி.எஸ். : நவ.30-ல் கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம்
23 Nov 2025சென்னை : கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
-
பஞ்சாபில் 50 கி. ஹெராயின் பறிமுதல்
23 Nov 2025சண்டிகர் : பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ ஹெராயினை பஞ்சாப் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.
-
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல் தகனம்
23 Nov 2025சென்னை : 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.6 கோடி மோசடி : சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
23 Nov 2025சென்னை : பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ.


