எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், ஈரோடு மற்றும் பவானி வட்டங்களில் உள்ள அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி திட்ட வாய்க்கால்களின் வழியாக முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 5.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இன்று (05.10.2017) தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டார்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து விவசாயிகளின் நலன் கருதி பழைய பாசன பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்கள், காலிங்கராயன் வாய்க்கால், புதிய பாசனப் பகுதியான கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளும் என 4 வாய்க்கால்களிலும் முதல் முறையாக ஒரே நாளில் அதிகாலை 5.00 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு வடகிழக்கு பருவமழை மூலம் எதிர்பாக்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர்த்தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு முறை வைத்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது பழைய பாசனப்பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக 1100 கனஅடியும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடியும், மொத்தம் 1700 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. புதிய பாசனப்பகுதியான கீழ்பவானி பாசனத்திட்டத்திற்கு கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் 500 கனஅடி அளவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கீழ்பவானித்திட்ட பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 2300 கன அடி வரை தண்ணீர் வழங்கப்படும்.
பழைய பாசனப்பகுதிகளான தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர் ஆகிய வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களில் உள்ள 15,746 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கீழ்பாவனித் திட்ட பிரதானக் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி ஆகிய வட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
இன்று அக்டோபர் 5 தண்ணீர் திறக்கப்பட்டத்தைத் தொடர்ந்து அக்டோபர் 24 வரை 20 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் 10 நாட்களுக்கு தண்ணீர் நிறுத்தியும், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும் என்ற அடிப்படையில் நான்கு முறை நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி மொத்தம் 80 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு 40 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.சத்தியபாமா, நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜூன், சட்டமன்ற உறுப்பினர்கள் வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), இ.எம்.ஆர்.ராஜா(எ) கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் (அந்தியூர்), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்), உ.தனியரசு (காங்கேயம்), பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை (ஈரோடு) எம்.குழந்தைசாமி, செயற்பொறியாளர் (பவானிசாகர் அணை) செந்தில்வேலன், கண்காணிப்பு பொறியாளர் எஸ்.நடராஜன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
விராட் கோலி டக் அவுட்
23 Oct 2025ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
-
1,000 ரன்களை கடந்த இந்தியர்: ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகள் படைத்த ரோகித்
23 Oct 2025அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


