முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று அ.தி.மு.க.வின் 46-வது தொடக்க விழா கொண்டாட்டம்: எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு தலைமைக்கழகத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவித்து மரியாதை

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க.வின் 46-வது தொடக்கவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையணித்து மரியாதை செலுத்துகின்றனர்.

தொடக்க விழா

அ.தி.மு.க.வின் 46-ம் ஆண்டு தொடக்கவிழா சென்னையில் இன்று  கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று தொடக்க விழா கொண்டாடங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அக்கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையணிவிக்கிறார். பின்பு எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த விழாவில் அ.தி.மு.க., எம்.ஜிஆர் மன்றம், எம்.ஜி.ஆர் இளைஞர்அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், ஜெயலலிதா பேரவை, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிற மாநிலங்களின் நிர்வாகிகள், கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. ஓருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  வலியுறுத்தியுள்ளார்.

வாழ்த்து அறிக்கை

அ.தி.மு.க.வின் 46-வது தொடக்க விழா கொண்டாட்டங்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் மாநில பொதுசெயலாளர் இடிமுரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக வளர்க்கப்பட்ட அ.தி.மு.க.-வின் 46-ம் ஆண்டு தொடக்கவிழா நடைபெறுவதை அறிந்து முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவித்தது போலவே அ.தி.மு.க. என்பது எஃகு கோட்டை, அது ஏழைகளின் பாதுகாப்பு அரண் என்பதை நிலைநிறுத்தி, எதிரிகள் தந்த தொல்லைகளை அறுத்தெறிந்து, சோதனைகளை சாதனைகளாக மாற்றி, பல்வேறு மக்கள்நல திட்டங்களை வழங்கி, ஜெயலலிதாவின் நல்லாட்சியை நிலைநாட்டி நடத்திக் கொண்டிருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டுகிறேன்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து