முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகாடு மலைப்பகுதியில் மழை காரணமாக பல்வேறு மலைப் பகுதிகளில் நிலச்சரிவு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வடகாடு, வண்டிப்பாதை, பால்கடை, பெத்தேல்புறம், கே.சி.பட்டி, மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் வாகனங்கள்  கொடைக்கானல், வத்தலகுண்டு, பெரியகுளம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதியில் அதிக எடையுள்ள மரங்களை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் அரசு பேருந்துகள் போக்குவரத்து இடையூறின்றி விரைவாக செல்ல நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் உடனடியாக சீரமைக்க வேண்டுமாய் மலைப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைத்தால் பள்ளி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு பொதுமக்கள் இடையூறின்றி தங்கள் பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என நெடுஞ்சாலைத்துறையினருக்கு அணைத்து தரப்பு பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து