முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

90 சதவீத ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை செய்வதில்லை: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 90 சதவீத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் வேலைகளைச் செய்வதில்லை, கோப்புகளில் கையெழுத்திடாமல் கிடப்பில் போடுகின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் திட்டத்துக்கு ஆட்சியதிகாரம் ஆட்சேபணை தெரிவிப்பதாகக் கூறிய அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி முழு மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்பணியாளர்கள் ஆக்கி விடுவேன் என்றார்.

மின்சாரத்துறையின் ஓய்வூதியதாரர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “90 சதவீத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வேலை செய்வதில்லை, கோப்புகளை கிடப்பில் போட்டு விடுகின்றனர்.

ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் என் முன்மொழிவை நான் அறிவித்தவுடன், அனைத்து அதிகாரிகளும் என்னை எதிர்த்தனர், அதாவது அவர்களை நிரந்தர ஊழியர்களாக்கினால் வேலை செய்ய மாட்டார்கள் என்று எதிர்ப்பாளர்கள் கூறினர், இதுதான் காரணமென்றால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தற்காலிகப் பணியாளர்களே, காரணம் இவர்களும்தான் வேலை செய்வதில்லை.

மின்சாரத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைத் திட்டத்திற்கு அதிகாரிகள்தான் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்று எனக்கு தகவல் வந்துள்ளது.தலைமைச் செயலகத்தில்தான் வளர்ச்சி தடைபடுகிறது என்று நான் சில வேளைகளில் உணர்வதுண்டு.தொழிலாளர் துறையினரிடம் பணி நிரந்தரத்துக்கான வரைவு அறிவிக்கையை துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு கூறினேன், அவரும் இதற்கு முட்டுக்கட்டை போட்டால் ஒப்பந்த ஊழியர்கள் அவருக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

கெஸ்ட் ஆசிரியர்களின் பணி நிரந்தர கோப்பும் துணை நிலை ஆளுநரிடம் உள்ளது. இப்போது இது துணை நிலை ஆளுநருக்கும் கெஸ்ட் ஆசிரியர்களுக்கும் இடையிலானதாக உள்ளது. வேலைக்கேற்ற சமமான ஊடியம் என்பது குறித்தும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம், இதிலும் துணை நிலை ஆளுநர் ஏதேனும் தடை ஏற்படுத்த முயற்சி செய்தால் நீங்கள்தான் அதனைத் தீர்க்க வேண்டும்” என்றார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து