முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்களில் 70 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற 2 தற்கொலைப்படை தாக்குதல்களில் 70 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியா முஸ்லிம்களின் இமாம் ஜமாம் மசூதி உள்ளது. அந்த மசூதியில் இரவு தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மசூதியில் ஊடுருவிய தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இதில் 39 பேர் பலியாகினர். 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் ஹார் மாகாணம், குவாஜகான் பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம்களின் மசூதியில் தொழுகை நடைபெற்றது. அப்போது ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி வெடித்துச் சிதறினான். இதில் 31 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கண்டனம் தெரிவித்துள்ளார். இரு தாக்குதல்களுக்கும் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து