எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தடப்பள்ளி பாசனப் பகுதியில் இயந்திர நெல் நடவுப் பணி துவங்கியது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பங்கேற்றார்
தற்போது கொடிவேரி அணைக்கட்டு பாசனங்களான தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் தடப்பள்ளி பாசனப் பகுதியில் சுமார் 7500 ஏக்கருக்கு நெல் சாகுபடி செய்ய நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதற்கு பாய் நாற்றாங்கால் தயார் செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் ஒன்று அல்லது இரண்டு நாற்றுக்களை 15-நாட்களுக்குள் நடும்போது தூர்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் கூடுவதால் இந்த முறை விவசாயிகளிடம் பிரபலமாகி வருகிறது.
கோபி வட்டாரத்தில் மேற்படி பாய் நாற்றாங்கால் மூலம் தயார் செய்த நாற்றுகளை இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணியை செங்கலரைக்கரை பகுதியில் கரட்டடிபாளையம் சுப்பிரமணியம் என்பவரது வயலில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது – ‘ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் வறட்சிக்கு பிறகு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திற்கு உணவு தானிய உற்பத்தி இலக்காக 3 இலட்சத்து இரண்டாயிரத்து எட்நூற்று இருபத்து ஏழு மெ.டன்கள் (3,02827 மெ.டன்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எய்துவதற்கு நெல், சிறுதானியம், பயறுவகைகள் ஆகிய பயிர்களை தீவிரமாக சாகுபடி மேற்கொள்ள வேளாண்மைத்துறை களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், மானாவாரி பகுதி விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 2500 ஏக்கர் கொண்ட தொகுப்பு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடைப் பராமரிப்பு, வேளாண்மை வணிகம் உள்ளிட்ட துறைகள் மூலம் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 20 சிறு, குறு விவசாயிகள் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்களை ஏற்படுத்தி 50 குழுக்களுக்கு 1000 விவசாயிகள் அடங்கிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பேட்டியின் போது கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி, பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பத்மநாபன் மற்றும் வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியிலிருந்து கிராமத் தங்கல் திட்டத்தின்கீழ் வருகை தந்துள்ள இறுதி ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவியர் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளில் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இயந்திர நடவு பயிற்சி ஏற்பாடுகளை கோபி வட்டார அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் அரவிந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மகாவிஷ்ணு, தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
24 Oct 2025நாகப்பட்டினம்: வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.


