முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ. சத்யா நாதெள்ளா அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அமெரிக்காவின் ரெட்மாண்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

ஐதராபாதைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரியாக 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் எழுதியுள்ள ஹிட் ரெஃப்ரஷ் எனும் புத்தகம் சமீபத்தில் வெளியானது. ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முன்னுரை எழுதியுள்ளார்.

நவம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் டெல்லி மற்றும் ஐதராபாதில் நாதெள்ளா சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, அரசு அதிகாரிகளுடனான சந்திப்பு மற்றும் மாணவர்களை சந்திப்பது உள்ளிட்டவை அவரது பயண திட்டத்தில் அடங்கும்.

இந்தப் புத்தக விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மேற்கொள்ளும் நலத்திட்டப் பணிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து