முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      இந்தியா
Election-Commision 2023-04-20

புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அடங்கிய 89 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப். 26) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் வெளி மணிப்பூர் தொகுதியின் சில பகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மற்ற பகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடத்தப்படவுள்ளது. 

இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.வாகனங்கள் செல்ல முடியாத வடகிழக்கு பகுதிகளுக்கும் பிற இடங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது. இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் புதன்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து