எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிரந்தரத் தீர்வு காண டிசம்பர் மாதத்திற்கு பின்னர் அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ஜெயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், கலெக்டர்கள் சுந்தரவள்ளி (திருவள்ளூர்) அன்புச்செல்வன், (சென்னை) பொன்னையா ( காஞ்சிபுரம் ) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்பொழுது ஏற்பட்ட அல்ல
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: இப்பொழுதும் நிறைய இடங்களில் குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்திருக்கிறது. அதற்கு ஆக்கிரமிப்புதான் காரணம் என்கின்றார்கள். அதனை அகற்ற என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது?
பதில்: இது தற்பொழுது ஏற்பட்ட ஆக்கிரமிப்பு அல்ல, உங்களுக்கே நன்றாகத் தெரியும். இவை குடியிருப்புப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள், இப்பொழுது கட்டப்பட்ட வீடுகள் அல்ல. இன்றைக்கு சென்னை மாநகரைப் பொறுத்தவரை, 25 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு அனைத்தும் கட்டிடங்கள் நிறைந்த பகுதி. அதிக மழை பொழிகின்றபொழுது, சாலைகளின் வழியாகத்தான் மழைநீர் வெளியேற முடியும். 4 செ.மீ. பொழியும் மழையின் அளவிற்குத்தான் வசதி இருக்கின்றது. எல்லா நகரங்களிலுமே, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகளவில் எடுத்துக்கொண்டாலும், நகரப் பகுதிகளில் நீர் அன்றாடம் வெளியேறுவதற்குண்டான கால்வாய்தான் அமைத்திருக்கின்றார்கள்.
386 கி.மீ வடிகால் வசதி
கனமழை பொழிகின்றபொழுது, அதிகமானமழைநீர் வருகின்றபொழுது, அனைத்தும் கட்டிடங்களாக இருக்கின்ற காரணத்தினால் அந்த மழைநீர் சாலை வழியாகத்தான் செல்கின்றது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகின்றது. அதுதான் காரணம். அப்படியிருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2015-ஆம் ஆண்டில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்பதற்காக, சட்டமன்றத்தில், சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் ரூ.4,034 கோடி வெள்ளநீர் வடிகால் வசதி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1,101 கோடி நிதிஉதவி செய்து 386 கி.மீ.க்கு வடிகால் வசதி செய்து கொடுப்பதற்காக திட்டம் தீட்டப்பட்டு, 300 கி.மீ. இன்றைக்கு நிறைவடைந்திருக்கின்றது.எஞ்சிய 86 கி.மீ. பணிதுவங்கவிருக்கின்றது.
ரூ.1,887கோடி மதிப்பில்...
அதேபோல, கொசஸ்தலை ஆற்று வடிநிலப் பகுதியில் ரூ.1,887கோடி மதிப்பீட்டில் உதவியுடன் வடிகால் வசதியை நிரந்தரமாக செய்துகொடுப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல கோவளம் வடிநிலப்பகுதிக்கு ரூ.1,234 கோடி மதிப்பீட்டில் முகறு என்ற நிறுவனத்தின் மூலமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகின்றது. ஆகவே, பருவமழை அதிகமாக பொழிகின்ற காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழைநீரை வடிகால் வசதியுடன் வெளியேற்றுவதற்காக அந்தப் பணிகள் படிப்படியாக செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விரைவில் பணி முடியும்
கேள்வி: சென்னையிலுள்ள குடிநீர் தேவையைப் போக்குவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்றதே?
பதில்: அதில் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியும். காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம், நாம் அணை கட்டுகின்ற பகுதிகளில் உள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க மறுக்கின்றார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தப் பணி விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் 4, 5 மாதங்களில் பணி நிறைவடைந்துவிடும்.
அரசு தீவிர நடவடிக்கை
கேள்வி: கடந்த முறையின் பொழுது மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிலேயே, இந்த முறையும் தேங்கியுள்ளது. அதற்கான காரணங்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதா? நிரந்தரத் தீர்வு காண ஏதேனும் முக்கிய முடிவுகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதா?
பதில்: நிரந்தரத் தீர்வு காண்பதற்காகத்தான், நான் விளக்கமாக கூறியிருக்கின்றேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வெள்ளநீர் வடிகால் வசதி செய்வதற்காக ரூ 4,034 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட பணி தொடங்கப்பட்டு, இன்னும் இரண்டு கட்டப்பணிகள் துவங்கவிருக்கின்றது. அதுமட்டுமல்ல, தாழ்வான பகுதிகளில் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள், அதற்கு வழிகண்டு அவற்றை அகற்றிக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு அமைச்சர்கள், அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு, இரவு பகல் பாராமல், சென்னை மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை மின்மோட்டார் வைத்து உடனடியாக வெளியேற்றியதன் காரணத்தினால் இன்றையதினம் சென்னை மாநகரத்தில் எங்கேயும் நீர் இல்லாத அளவிற்கு அரசு எடுத்தநடவடிக்கையைக் காணமுடிகின்றது.
15 மண்டலங்களிலும்...
அரசைப் பொறுத்தவரை, துரித நடவடிக்கைகளை எடுத்துதான் வருகின்றது. வீடுகளை இடிக்காமல், இருக்கின்ற வழிகளை வைத்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தண்ணீர் அகற்றப்படவேண்டும் என்கின்ற சூழ்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அரசு தக்க நடவடிக்கை எடுத்ததின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற 15 மண்டலங்களிலும், தாழ்வான பகுதியில் இருக்கின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டிருக்கின்றது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்துள்ள பகுதி.
டிசம்பர் மாதத்திறக்கு பின்...
அந்த ஏரிகள் நிறைந்த பகுதிகளில், தாழ்வானபகுதிகளில் வீடுகள் கட்டியுள்ள காரணத்தினால் மழைநீர் வெளியேறாமல் இருக்கின்றது. அப்படிப்பட்ட அந்தப் பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரை நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தகவல்கள் கேட்டிருக்கின்றோம். அவர்களும் அப்பணிகளை மேற்கொள்வார்கள். இந்தப் பருவமழை டிசம்பர் மாதம் வரை பொழியும், அதன்பிறகு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.