முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையை முடக்கிவிட்டால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் யோசனை

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி: தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிரடியாக கூறியுள்ளார்.

 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடித்தும் வருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வேதனைக்குரியது. இந்த விவகாரத்தில் நீண்டகால தீட்டத்துடன் பிரதமர் மோடி செயல்படுகிறார். கொச்சி கடற்படை தளத்தில் மீனவர்களுக்காக படகுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து