முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வசமுள்ள கடைசிப் பகுதியை நோக்கி ஈராக் படை முன்னேறுகிறது

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஸின் வசமுள்ள கடைசிப் பகுதியை கைப்பற்ற அந்நாட்டு அரசுப் படை வேகமாக முன்னேறி வருகிறது.

இதுகுறித்து ஈராக் ராணுவத் தரப்பில், "ஈராக்கில் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக கடைசிக் கட்டத்தை ராணுவம் அடைந்து விட்டது. ஐ.எஸ் வசமுள்ள ஈராக் - சிரியா எல்லையோர மேற்கு பாலைவனப் பகுதியை நோக்கி ஈராக் ராணுவம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. விரைவில் அப்பகுதி கைப்பற்றப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ஈராக்கின் 2-வது மிகப்பெரிய நகரமான மோசூலை கடந்த 2014-ம் ஆண்டு ஜூனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க படையின் உதவியுடன் மோசூலில் ஈராக் தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் போரிட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் மோசூல் நகரை ஈராக் அரசுப் படை கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து