திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி, வேட்டாம்பாடி, நாமக்கல்.
நவீனமயமாதல், டிஜிட்டல் இந்தியா என நம் நாடு பல முன்னேற்றம் அடைந்தாலும் இன்னும் நம் நாடு விவசாயத்தையே முதகெலும்பாய் நம்பியுள்ளது. நாட்டின் மொத்த பரப்பளவில் 60.4% விவசாய நிலமாகும். இந்திய ஜிடிபியில் 16 சதவீதம் விவசாயத்திலிருந்து கிடைத்துள்ளது. பல வகையான உணவு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவே முதலிடம்.
இவ்வளவு பெருமையிருப்பினும், இந்தியாவில் பத்தில் இரண்டு பேர் பசியோடு தான் இருக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பு இன்னும் தொடர்கிறது. விவசாயியின் நிலைகளை சொல்லி உலகம் அறிய வேண்டியதில்லை. முப்போகம் தந்த அதே மண் ஒரு போகம் கூட தர மறுக்கிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? காரணம் காரியம் இரண்டுமே ஒன்று தான்...அதுவும் நாம் தான்....
பசுமை புரட்சி என்றோம்! இரசாயணங்களை பூமியில் கொட்டித் தீர்த்தோம்! இயந்திரங்களை கொண்டு பூமியை கிளறி பதம் பார்த்தோம்! பூமியின் உதிரத்தை இயந்திரம் கொண்டு உறிந்தோம்! விளைச்சல் என்று நம்பி விதைகளை மாற்றினோம்! மாற்றம் செய்த விதையை நம்பி பாரம்பரிய விதைகளை மாற்றினோம்! உலகையே ஆக்கி அழிக்கும் நுண்ணுயிர்களை இழந்தோம்! உயிரும் உதிரமும் கொண்ட மண்ணை உயிரற்ற திடப்பொருளாக்கினோம்! நம்மால் விளைந்த இந்த விளைவுக்கு நாமே விடை காண்போம்... பூமியைக் காக்க புதியதோர் மாற்றம் கொண்டு வருவோம்.... அந்த மாற்றம் இயற்கை முறையில் வேண்டும்..விளை நிலத்திற்கான உண்மை பொருளை உலகறிய செய்த நம்மாழ்வர் அவர்கள் கொண்டு வரா விரும்பிய மாற்றமாக இருத்தல் வேண்டும்.
நிலத்தின் வளத்தை பெருக்க வேண்டும் அதுவும் இயற்கை முறையில்... இது சாத்தியமா? நிச்சயம்... பயிர்த்தொழில் என்பது இயற்கை சார்ந்த்தாக மட்டுமே அமைதல் வேண்டும்.... காரணம் இயற்க்கையை வெல்ல மணிதன் எடுக்கும் அனைத்து முயற்சியும் தோல்வியிலேயே முடியும். மண்ணை காக்க வேண்டிய பொருட்களை தெருவின் குப்பைகளில் கொட்டி விட்டு, இரசாயனத்தை நம்பிக் கொண்டிருக்கிறோம். இரசாயணங்கள் முதலில் விளைச்சல் தரலாம். ஆனால், இவை அனைத்தும் விசங்கள்.சிறிது சிறிதாய் நிலத்தை மலடாக்கும்.அதன் விளைவு.... விளை நிலம் விலை நிலமாகும்...
நிலத்தின் வளத்தை பெருக்க.... பயிர் சுழற்சி செய்ய வேண்டும்... கலப்பு பயிர் சாகுபடி செய்யலாம். கலப்பு பயிரால் நுண்ணுயிர்கள் மேம்படும். பயிருக்கு தேவையான தனிமங்கள் அனைத்தையும் நுண்ணுயிர்கள் பெருகச் செய்யும். நுண்ணுயிர்கலாள் காற்றோட்டம் அதிகரிக்கும். ஈரப்பிடிப்பு அதிகரிக்கும். மண் அரிப்பு தடுக்கப்படும். இதை கடந்து பலர் அறியாத உண்மை ஒன்றும் உண்டு. கலப்பு பயிர் சாகுபடியால் கரி உள்வாங்கப்படுவதால், புவி வெப்பமயமாதல் குறைக்கப்படுகிறது. மண்ணில் அதிகப்படியான வளங்கள் அதன் மேல் புறத்தில் தான் உள்ளது. நவீன வேளாண் இயந்திரம் கொண்டு மண்ணை கிளருவதால் வளங்களை சரியாக பயன்படுத்த இயலவில்லை.
“இயற்கையை இயற்கைக்கே திருப்பியளிக்க வேண்டும்“ என்பது ஒற்றை வைக்கோல் புரட்சியின் ஆசிரியர் ஃபுகாக்கோவின் கருத்து. அவரது கருத்து நிதர்சனமான உண்மை. முதல் பருவத்தில் கிடைக்கும் வைக்கோலை மண்ணிலேயே வைத்து மண்ணின் வளத்தை பெருக்க வேண்டும். இதுவே நம் பாரம்பரியம். இது மட்டுமல்லாமல், மண்ணின் வளத்தை காக்க மண்புழு உரம் மிக அவசியமானது. இரசாயன உரத்தில் கிடைக்கும் தாதுக்களை விட இது 20 சதவீதம் அதிகமாக வளத்தை பெருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் தோராயமாக 40,000 மண்புழுக்கள் இருக்கும் என்பது டார்வினின் ஆராய்ச்சி. மண்புழுக்கள் இருக்கும் நிலமே வளமானது. நிலத்தின் வளத்தை மண்புழுவே காட்டிக்கொடுக்கும். தனிமங்களை மண் ஏற்றுக்கொள்வதற்கு மண்புழுக்களே பெரிதும் உதவுகிறது. தாவர, விலங்குக் கழிவுகள் மீது பூஞ்சை, பாக்டீரியா மண்புழுக்கள் வளரும்.இதனால் அந்த கழிவு பழுப்பு நிறத்திற்கு மாறும். இத்தகைய கழிவைக் கொண்டு நில வளத்தைப் பெரிதும் மேம்படுத்தலாம்.
மாட்டின் சானத்தை மட்டுமே எருவாக பயன்படுத்தலாம் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் தமிழன் தன் இரண்டாவது தாயாக கருதும் மாடு தரும் அனைத்துமே விளைச்சலை ஊக்குவிக்கும். பஞ்சகாவ்யாவை விதை நேர்த்தி தொடங்கி, நடவு, வளர்ச்சிப் பருவம், பூ வளர்ச்சி, காய்ப் பெருக்கம், அறுவடைக்குப் பின் கெடாமை என பல இடத்திலும் பயன்படுத்தலாம். இந்தியாவில் தேவைப்படும் சக்தியில் 66% கால் நடைகள் மூலமே கிடைக்கின்றன. நிலக்கரி, பெட்ரோல், டீசல் மூலம் கிடைப்பவை 14% மட்டுமே. கால் நடைகள் மூலம் கிடைக்கும் சக்தியும் எருவும் சூழலை மாசுபடுத்துவது இல்லை. மாறாக மண் நலத்தையும், மக்கள் நலத்தையும் காக்க வல்லவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். உழவு பற்றிய அறிவியலின் வயது ஒரு 100 வருடந்தான். 10,000 ஆண்டுகளாய் விவசாயம் செய்யும் உழவன், ஒரே பயிரில் பல இரகங்களை கையாண்டான். அவனது பாரம்பரிய விதைகள் நோய்க்கு உட்படவில்லை. அறிவியலின் ஆட்சியால் பல இரகங்கள் அழிந்தன. இரசாயன உரங்களுக்கு கட்டுப்படாத பல இரகங்கள் ஓரங்கட்டப்பட்டன. இரசாயனத்தை கொட்டி வணிகத்தை மட்டுமே பெருக்கியது, நவீன வேளாண்மை. இந்த நிலை தொடர்ந்தால் இருக்கும் ஓரிரு இரகங்களும் அழிந்துவிடும். நாம் பின்பற்றும் நவீன வேளாண்மையில் 38% இழப்பீடு நோய், பூச்சி மற்றும் களைகளால் ஏற்படுகிறது. இத்தகைய இழப்பீடுகளை இயற்கை வேளாண்மையால் கட்டுபடுத்தலாம். பருவம் அறிந்து பயிர் செய்தல், மூலிகைச் சாறு தெளித்தல் ஆகியனவே உரிய விளைச்சல் எடுக்க தகுந்த முறைகள்.
பூச்சிகள் அனைத்துமே எதிரிகள் அல்ல. மகரந்த சேர்க்கைக்கு அவை அனைத்துமே இன்றியமையாதவை. கால் ஏக்கர் நிலத்தில் பல லட்சம் சிலந்திகள் வாழ்கின்றன. அவை பல ஆயிரம் மீட்டர் வலைகளை பின்னுகின்றன. பயிரை அழிக்கும் தாய்ப் பூச்சிகள், சிலந்தி வலையில் சிக்குவதால் பயிர்கள் காப்பற்றப்படுகின்றன. ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படும்போது சிலந்தி வலைகள் நொடியில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் 60% நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாக உள்ளது. இந்த நிலங்களில் எந்தவித இழப்பும் இன்றி இயற்கை வேளாண்மை செய்யலாம். இது குறித்து சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான “இக்ரிசாட்“ ஆராய்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தைஉயர்த்த பண்ணைக் குட்டை அமைக்கலாம்.
உலகமெங்கும் நஞ்சில்லா உணவுக்கான வரவேற்பு உயர்ந்துள்ளது. மேற்கண்ட நடைமுறையை பின்பற்றுவதால் உலகுக்கே தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. இயற்கை வழங்கிய நீரையும், நெற்றி வேர்வை சிந்தி உழவன் திருத்திய நிலத்தையும் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு, மக்களுக்குச் சத்துணவு வழங்கிய மாடுகளை கறிக்கடைக்கு அனுப்பிவிட்டு, ஆலைகளின் சாக்கடையை வயலுக்குள் பாய்ச்சி, விளைந்த பொருளுக்கு விலை ஏறி விடாதபடி கட்டுப்பாடு விதித்து, உழவர்களை நிலத்தை விட்டு வெளியேறி, ஏற்றுமதி இறக்குமதிக்கு அகலச் சாலை போட்டு, பசியை மாற்றாவும் ஆற்றவும் போகிறோமா... அல்லது ஆலைத் தொழிற்சந்தையில் மனித எந்திரங்களை மலிவாக வழங்கப் போகிறோமா?
இது நம்மாழ்வார் அவர்கள் உலகிற்க்கு விட்டுச் சென்ற கேள்வி... இதுக்கான விடை நாம் இந்த பூமிக்காக மேற்கொள்ளும் மாற்றாந்தான்.
கவிபிரியா.பா - பி.எஸ்.சி(வேளாண்மை) இறுதி ஆண்டு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
16 May 2022லும்பினி : கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
-
அமெரிக்காவில் அடுத்தடுத்து சோகம்: கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த துப்பாக்கி சூடு - ஒருவர் பலி
16 May 2022கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்
-
தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன்: இந்தியா அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய அரசு
16 May 2022பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
-
திருப்பூர், ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைப்பு : 410 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
16 May 2022திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோட்டில் இருக்கும் 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
-
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்: அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
16 May 2022சென்னை : தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்
-
மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
16 May 2022சென்னை : மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழு
-
கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் : ஐ.ஐ.டி.க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
16 May 2022புது டெல்லி : கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
16 May 2022சென்னை : மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழை பிற மாநிலங்களில் 3-வது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் : பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி பேச்சு
16 May 2022சென்னை : பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
-
நடப்பு ஐ.பி.எல் தொடர்: பிளேஆப் சுற்றுக்கு நுழைய 5 அணிகள் கடும் போட்டி
16 May 2022மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
-
கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் : வடகொரியா அதிபர் குற்றச்சாட்டு
16 May 2022பியோங்யாங் : வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
16 May 2022பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
-
புதிதாக 2,202 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சரிந்தது
16 May 2022புதுடெல்லி : புதிதாக 2,202 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக சரிந்துள்ளது.
-
பட்ட காலிலே படும் - கெட்ட குடியே கெடும் - இலங்கையில் கனமழை, வெள்ளம் : 600 குடும்பங்களுக்கு கடும் பாதிப்பு
16 May 2022கொழும்பு : இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
-
வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகள் பட்டியல் வெளியீடு: ஐ.நா அறிக்கையில் தகவல்
16 May 2022நியூயார்க் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா. தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
-
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
16 May 2022சென்னை : தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாயிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இளங்கலை மருத்துவ நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
16 May 2022புதுடெல்லி : இளங்கலை மருத்துவ நீட் தேர்வுகான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்: இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்
16 May 2022கொழும்பு : மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் காரணமாக இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
உலகின் மிக உயர எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி
16 May 2022அகமதாபாத் : உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர்.
-
முத்தம் கொடுப்பது இயற்கைக்கு மாறான பாலியல் குற்றம் அல்ல : மும்பை ஐகோர்ட் அதிரடி
16 May 2022மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன்
-
சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு : சுனில் கவாஸ்கர் கணிப்பு
16 May 2022மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
-
மாணவர்களிடையே மோதல்: கிருஷ்ணகிரி அருகே 10-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து-காயம்
16 May 2022கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
-
நுழைவுத் தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளை : அமைச்சர் பொன்முடி பேச்சு
16 May 2022சென்னை : நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடித்து வருகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர
-
தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு: பருத்தி, நூல் விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்துங்கள் : பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 May 2022சென்னை : பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்
-
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது : இம்ரான்கான் சொல்கிறார்
16 May 2022இஸ்லாமாபாத் : உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புலம்பி இருக்கிறார்.