முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ பாடத்திட்டப்படியே நீட் தேர்வு: மத்திய அரசு திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  நடப்பாண்டில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டப்படியே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நடப்பாண்டில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில், மாநிலப் பாடத் திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்த நிலையில், திடீரென்று தனது நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு, நீட் என்படும் தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வினை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி.  நடத்தி வருகிறது.

இதனிடையே, நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், நிகழாண்டு (2018) நடத்தப்படும் நீட் பொது நுழைவுத் தேர்வில், மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டின் (2017) பாடத் திட்டத்தின்படியே, நடப்பாண்டிலும் (2018) நீட் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது.மேலும், நுழைவுத் தேர்வு பாடத்திட்டத்தில் மேற்கொண்டு எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து