எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உழைக்கும் மகளிருக்கான 'அம்மா இருசக்கர வாகனம்' மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 முதல் வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வாகனத்தை மூன்று ஆண்டுகளுக்கு மாற்றவோ, விற்கவோ கூடாது என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வாகனங்களை பெற தகுதி உள்ள பெண்கள் யார்? அவர்கள் தாக்கல் செய்யவேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்தும் அரசு விளக்கமாக தெரிவித்துள்ளது.
50 சத மானியத்துடன்...
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு:-
தொலைநோக்குப் பார்வை கொண்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, இந்திய நாட்டிலேயே முதன்முறையாக ``மகளிர் பணியிடங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும்’’ முன்னோடி திட்டத்தினை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அதன்படி தமிழக முதல்வராக 16.02.2017 அன்று பதவியேற்ற எடப்பாடி கே.பழனிசாமி, அம்மாவின் வழியில் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் முனைப்போடு, பதவியேற்றவுடன் ``அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்திற்கான’’ கோப்பில் முதல் கையெழுத்திட்டு, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட ஆணையிட்டார்.
அம்மா பிறந்த நாளன்று...
இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ``அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தினை’’ சிறப்பாக செயல்படுத்திட பல்வேறு ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கினார். அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் பிறந்த நாளான 24.02.2018 அன்று முதல், உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.
மாற்றவோ - விற்கவோ கூடாது
பணிபுரியும் மகளிர் மற்றும் திருநங்கையர் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும் மற்றும் வங்கிகளுக்குச் சென்று வர ஏதுவாக அவர்களுக்கு ஏற்ற வகையில் கியர் இல்லாத, ஆட்டோ கியர், 125 சிசி கொள்-திறனுக்கு மிகாமல் இருக்கும் இரு சக்கர வாகனத்தினை அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளின் உபயோகத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களும் வாங்கலாம். மேலும் தங்களது சொந்த நிதி அல்லது வங்கிகள் மூலமாகக் கடன் பெற்று, இரு சக்கர வாகனம் வாங்கிக் கொள்ளலாம். புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கும். இம்மானியமானது மகளிரின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படுவதால், பயனாளிகள் வாகனத்தை மூன்று ஆண்டுகளுக்கு யாருக்கும் மாற்றவோ, விற்கவோ கூடாது.
தகுதி உள்ளவர்கள் யார் ?
சுய தொழில் புரிபவர், கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசாங்க நிதி உதவி பெறும் நிறுவனங்கள், அரசாங்க தொழில் திட்டங்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், மக்கள் கற்றல் மையம்) தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிபவர்கள், வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பில் பதிவு செய்த மகளிர் போன்றோர் மானியம் பெற தகுதியுடையவராவர்.
யார், யாருக்கு முன்னுரிமை ?
மேலும் தொலை தூரங்கள் / மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்கள், மகளிரை தலைவராகக் கொண்ட குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளி, ஆதரவற்ற விதவை, 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் திருநங்கையர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவராவார். பயனாளி விண்ணப்பிக்கும் நாளில் 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் 22.01.2018 முதல், மாவட்ட ஆட்சியரகம் / மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விலையில்லாமல் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேற்கண்ட அலுவலகங்களிலேயே நேரடியாகவோ அல்லது விரைவு / பதிவு அஞ்சல் மூலமாக 05.02.2018 அன்று மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களில் உள்ள உரிய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
வங்கி கணக்கில்...
திட்டப் பயனாளிகளை, சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள தேர்வுக் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் தனது சொந்த நிதியில் வாகனத்தை வாங்கினால், வாகன பதிவிற்கான சான்றை பயனாளி அளித்த பிறகு பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக விடுவிக்கப்படும். பயனாளி வங்கி மூலமாகக் கடன் பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தினை அவர்கள் விரும்புகிற வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு வகையிலும் பயனாளி முதலில் வாகனத்தை வாங்கி, அதற்கான மானியத்தை கோரும் விண்ணப்பத்தை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் என்ன ?
பயனாளிகள் விண்ணப்பத்துடன் கீழ்கண்ட ஆவணங்களின் நகல்களை சமர்பிக்க வேண்டும்
(1) இருப்பிடத்திற்கான ஆவணம், (2) வயது மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணம் (பிறப்புச் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) (3) வருமானச் சான்றிதழ் (4) ஓட்டுநர் உரிமம் (5) பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (6) அமைப்புச்சாரா நல வாரியத்திலிருந்து பெற்ற அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்ற அடையாள அட்டை (7) பணி புரிவதற்கான சான்றிதழ் (பணியமர்த்தியவரிடமிருந்து பெற்ற சான்றிதழ்) (8) ஆதார் அட்டை (9) சாதிச் சான்றிதழ் (10) வாகனத்திற்கான விலைப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திகுறிபில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.