முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூரில் இந்தியர்கள் குடியரசு கொண்டாட்டம்

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்: சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா உட்பட பல வெளிநாடுகளில் இந்திய குடியரசு தினத்தை இந்தியர்கள் தேசிய கொடியேற்றி கோலாகலமாக கொண்டாடினர்.

இந்தியாவின் 69-வது ஆண்டு குடியரசு தினம் நேற்றுமுன்தினம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், தேசிய கொடியை இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே ஏற்றி வைத்தார். பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வெளியிட்ட உரையை கவுதம் வாசித்தார். பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சீனாவில் உள்ள இந்தியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரிலும் நேற்றுமுன்தின் காலை இந்திய குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய தூதரக அதிகாரி பிரகாஷ் குப்தா, தேசிய கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் இந்தியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் இந்தோனேசியாவின் பாலி, மெடான் போன்ற பகுதிகளிலும் குடியரசு தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

சிங்கப்பூரில் இந்திய ஹை கமிஷர் நினாட் எஸ் தேஷ்பாண்டே தலைமையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரையை தேஷ்பாண்டே வாசித்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த 600-க்கும் மேற்பட்ட இந்தியர் கள் உற்சாகமாக கரவொலி எழுப்பினர்.

அதன்பின்னர் சிங்கப்பூரில் உள்ள இந்திய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேசப்பக்தி பாடல்களைப் பாடினர். பின்னர் தூதரகம் சார்பில் இந்தியர்களுக்கு தேஷ் பாண்டே விருந்தளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து