முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு - 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 2018-ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் பாலாறு படுகை பாசனத்தில் முதலாம் மண்டலப் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு  கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து இன்று முதல் இரண்டு சுற்றுகளில் மொத்தம் 3800 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து