முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் செல்போன்களின் இறக்குமதி வரி 20 சதவீதமாக உயர்வு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  செல்போன்களின் இறக்குமதி வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண்ஜெட்லி இதனை தாக்கல் செய்தார்.

பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. மோடி அரசின் கடைசி பொது பட்ஜெட் இது என்பதால் வரி விதிப்பில் மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என கருதப்படுகிறது. இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கும் மாத சம்பளதாரர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் செல்போன்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் செல்போனிகளின் வரி 15சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் வரி அதிகரிக்கும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து