முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 42 இந்திய மீனவர்களை கைது செய்தது பாகிஸ்தான்

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

Source: provided

புது டெல்லி : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, குஜராத்தைச் சேர்ந்த 42 மீனவர்களை பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தேசிய மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பின் செயலர் மணீஷ் லோதாரி கூறியதாவது:

குஜராத் மாநிலம், போர்பந்தரில் இருந்து சில தினங்களுக்கு மீன் பிடிக்கச் சென்ற 42 மீனவர்களை, தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கூறி பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்கள் பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 400 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. சுமார் 65 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மணீஷ் லோதாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து