எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத் தேர்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்இ மாணவர்கள் திட்டமிட்டுப் படிக்க வேண்டிய நேரம் இது. ஏற்கெனவே உங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் படித்த பாடங்களைப் பலமுறை படித்துப் பார்த்திருப்பீர்கள். ரிவிஷன் செய்திருப்பீர்கள். இந்த சில மாத காலத்தையும் திட்டமிட்டுப் படிப்பதற்குச் செலவிடுங்கள்.
முதல் மதிப்பெண்தான் உங்கள் லட்சியமா?
அப்படியானால் உங்கள் படிப்பு முறையில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முழு மதிப்பெண் பெற வேண்டும் என்றால் எல்லாப் பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். படிக்கும்போதே முக்கிய தகவல்களைக் கோடிட்டு வைத்துக்கொண்டு தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ளலாம். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கென தனியாக ஒரு நோட்டுப் போட்டு வைத்துக் கொண்டால் தேர்வு நேரத்தில் புரட்டிப் பார்ப்பது எளிதாக இருக்கும்.
பாடத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மறைந்திருக்கும் நுணுக்கமான விஷயங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். பழைய கேள்வித்தாள்கள் வகுப்புத் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்வித்தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு அடிக்கடி எழுதிப் பாருங்கள். இந்தப் பாடம் தேவையில்லை அந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் வராது என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து ஒதுக்காதீர்கள்.
மனப்பாடம் செய்ய....
கணக்குப் பாடத்தைப் பொருத்தவரை சூத்திரங்களை தனியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நேரத் திருப்புதலின்போது மிகவும் உபயோகமாக இருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது வாரம் ஒரு முறையாவது இந்த சூத்திரங்களை மனப்பாடமாக யாரிடமாவது ஒப்பித்து சரிபார்க்கவும். கட்டுரைகளை மனப்பாடம் செய்யும்போதே துணை தலைப்புகளை நன்கு நினைவில் பதித்துக் கொள்ளவும். தேர்வு நேரத்தில் கட்டுரை முழுவதையும் படிக்க முடியாமல் போகலாம். துணைத் தலைப்புகளை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனால்போதும் உள்ளே இருக்கும் சாராம்சம் நினைவுக்கு வந்துவிடும்.
கால நேர நிர்வாகம்
தேர்வு காலத்தில் நேர நிர்வாகம் முக்கியம். தேர்வு தேதிகள் தெரிந்தவுடன் மாணவர்கள் ஒரு டைம் டேபிள் போட்டுக்கொண்டு எந்தெந்தப் பாடத்துக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று பிரித்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு எத்தனை சப்ஜெக்ட்டுகள் இருக்கின்றனவோ அந்த சப்ஜெக்ட்டுகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு இந்த சில மாத காலத்தை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் இந்த சப்ஜெக்ட்டைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை உடனே படித்துவிடுங்கள். நாளை படிக்கலாம் என்று தள்ளிப் போடவேண்டாம். முயற்சி திருவினையாக்கும். தன்னம்பிக்கையோடு படியுங்கள். வெற்றி நிச்சயம்.
பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கக் கையாள வேண்டிய 9 முறைகள்..!
தங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவது பெற்றோரின் இயல்பே. ஆனால் பலரும் அதன்பொருட்டு தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்வதில்லை. சிலர் செய்ய நினைத்தாலும் வழிமுறை தெரிவதில்லை. எனவே அதற்கான சில முக்கிய ஆலோசனைகளை இப்பதிப்பில் காணலாம்.. இவற்றை பெற்றோர்கள் முறையாக பின்பற்றினால் அவர்களின் விருப்பத்தை அவர்களது குழந்தைகள் நிறைவேற்றுவார்கள்.
1. தொலைக்காட்சி..
ஒரு வீட்டில் டி.வி. பயன்பாடு என்பது முக்கியமானதுதான். அதேநேரத்தில் படிக்கும் நேரம் என்று வந்துவிட்ட பிறகு அதை அணைத்துவிட வேண்டும். இந்த விதியை பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். என்னதான் பிடித்த நிகழ்ச்சி என்றாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் தான் முக்கியம்.
2. தொலைபேசி..!
படிக்கும் நேரத்தில் வீட்டு தொலைபேசியை பயன்படுத்தும் அளவு குறித்து ஒவ்வொரு பெற்றோரும் முடிவு செய்யவேண்டும். படிக்கும் நேரத்தில் அவசியமற்ற தொலைபேசி அழைப்புகள் வருவது தடை செய்யப்பட வேண்டும். மேலும் நேரம் காட்டும் கருவியை இணைத்து வைத்து நீண்ட நேரம் பேசுவதை தவிர்க்கலாம். அதேசமயம் ஏதேனும் முக்கிய பாட விஷயங்களைப் பற்றியோ வீட்டுப்பாடம் பற்றியோ சக வகுப்பு தோழர்களுடன் தொலைபேசியில் தங்களின் பிள்ளைகள் பேச வேண்டியிருந்தால் அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
3. அறை வசதி..!
வீட்டில் போதுமான வசதி இருந்தால் உங்களின் குழந்தை படிப்பதற்கு ஒரு அறையை ஒதுக்கி தரவும். அந்த அறை அழகாக இருக்கிறதா என்பதை காட்டிலும் போதுமான வசதியுடன் இருக்கிறாதா? என்பது தான் முக்கியம். மேலும் உங்களின் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பேனா பென்சில் ரப்பர்உள்ளிட்ட பல பொருட்கள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
4. எழுத்து வேலைகள்..
இரவு நேரத்தில் குடும்ப கலந்துரையாடல் மற்றும் இரவு உணவு முடிந்தவுடன் குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பது மற்றும் வீட்டுப்பாடம் செய்ய தொடங்குவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். சில நாட்களில் பிள்ளைகள் பள்ளியிலிருந்து விரைவிலேயே வீடு வந்துவிட்டால் உணவுக்கு முன்பே வீட்டுப் பாடத்தை முடிக்க உதவலாம். மேலும் வேலைகளை முறையாக எழுதி வைத்துக் கொள்ள உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் எந்த குழப்பமும் வராது.
5. படிக்கும் நேர அளவு..!
உங்களின் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பாடத்தை முடிக்க அல்லது ஒரு பாடத்தை படிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று கவனியுங்கள். அதற்கேற்ப அவர்களுக்கு ஒவ்வொரு வேலையை முடித்த பிறகும் சிறிதுநேரம் இடைவெளி விடலாம். இடைவெளியை கண்காணித்து சரியான நேரத்தில் அவர்கள் மீண்டும் படிப்பில் அமர்வதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
6. தேர்வு பயம்...
தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் மீது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவர்களுக்கு தேர்வு பயம் மிக அதிகமாக இருக்கும். மேலும் தேர்வுக்கு முதல் நாள் இரவு நெடுநேரம் கண் விழித்து சிலர் படிப்பார்கள். ஆனால் உங்கள் பிள்ளைகள் அதை செய்வதை தவிர்த்து விடுதல் நலம். இரவு தூக்கம் மிகவும் முக்கியம். அப்போதுதான் மறுநாள் தேர்வை சிறப்பாக கவனித்து எழுத முடியும்.
7. தேர்வு எழுதும் முறை..
கேள்வித் தாளை நன்கு தெளிவாக படித்து பதில் அளிக்குமாறும் தெரியாத கேள்விகளை முதலில் தவிர்த்துவிட்டு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதி மீதி நேரம் இருந்தால் மீண்டும் அந்த விடுபட்ட கேள்விகளுக்கு வருமாறும் தேர்வு எழுதும் முன்பாக நன்றாக மூச்சை இழுத்துவிட்டு அமைதியுறுமாறும் உங்கள் குழந்தைகளிடம் தவறாமல் கூறவும். மேலும் விடைத்தாளில் சரியான எண்களை கவனமாக இட வேண்டும்.
8. வீட்டுப்பாடங்கள்..!
சில சமயங்களில் பெரியளவிலான வேலைகள் வீட்டுப்பாடமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் உங்களின் பிள்ளைகள் சோர்வடைந்து எதையும் செய்ய மனமின்றி இருப்பார். அந்த நேரத்தில் நீங்கள் பரிவுடன் நிலைமையை கவனித்து சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு இதைப் பற்றி ஒரு குறிப்பு எழுத வேண்டும். மேலும் அசைன்மென்ட் தருவது தொடர்பாக பெற்றோர்களுடன் கலந்துரையாட ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்படி அந்த குறிப்பில் கேட்கலாம்.
9. அன்பால் அரவணையுங்கள்..!
உங்களின் குழந்தை எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதை கவனித்து அதைப்பற்றி உங்கள் குழந்தை என்ன சொல்கிறது என்பதை பரிவுடன் கேட்க வேண்டும். அந்த பாடத்தை முடிந்தால் நீங்களே நேரம் ஒதுக்கி சொல்லி தரலாம் அல்லது பயிற்சிக்கு ஏற்பாடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம். இல்லையெனில் சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் இது குறித்து பேசலாம்.
எந்த குழந்தையையும் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றாலும் சாதுவான மற்றும் இயல்பான நிலையில் இருக்கும் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் படிப்பு விஷயத்தில் அடிப்பதை தவிர்க்க வேண்டும். சரியான முறையில் தீர்வு காண பெற்றோர் முயல வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
எனக்கு பாம்பு காது: சபாநாயகரின் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
17 Oct 2025சென்னை : எனக்கு பாம்பு காது என்ற சபாநாயகரின் பேச்சு சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.