முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடர் 2-வது அமர்வு, மார்ச் -5ல் தொடங்கும்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இரண்டாவது அமர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கிய முதல் அமர்வில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த அமர்வில் ஆந்திரத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை அறிவிக்கக் கோரி அந்த மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளின் அலுவல்களும் பாதிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திரத்துக்கென சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றமடைந்தார். இதையடுத்து அவர், கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நடத்திய கூச்சல், குழப்பத்தால் மாநிலங்களவையிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து