எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
குல்தீப் நீக்கம்...
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்காவும் (2-1), ஒரு நாள் தொடரை இந்தியாவும் (5-1) கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டார். தென்ஆப்பிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென், ஜூனியர் டாலா அறிமுகம் ஆனார்கள்.
இந்தியா பேட்டிங்...
‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முற்றிலும் பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில், பேட்டர்சன் வீசிய முதல் ஓவரில் ‘ஷாட்பிட்ச்’ பந்துகளை 2 சிக்சர் மற்றும் பவுண்டரிக்கு ஓட விட்டு ரோகித் சர்மாஅமர்க்களப்படுத்தினார். இதே போல் அடுத்த ஓவரிலும் எழும்பி வந்த பந்தை அடிக்க முயற்சித்த போது ரோகித் சர்மா (21 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச் ஆனார்.
மீண்டும் ரெய்னா...
2-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னா அடியெடுத்து வைத்தார். ஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய ரெய்னா, 7 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ரெய்னா 15 ரன்களில் (7 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து கோலி இறங்கினார். இதற்கிடையே தவான் 10 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது பந்து கையுறையில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச்சாக சிக்கியது. இதை கவனிக்காத நடுவர் வைடு வழங்கினார். அவர்களும் அப்பீல் செய்யாததால் தப்பி பிழைத்த தவான், அதன் பிறகு ரன்மழை பொழிந்தார்.
கோலி 26 ரன்கள்...
கோலி 10 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பெஹர்டைன் கோட்டை விட்டார். இந்திய அணி 8.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. அதே சமயம் இந்த முறை நீண்ட நேரம் நிலைக்காத கோலி 26 ரன்களில் (20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷம்சியின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து பார்த்தும் பலன் இல்லை.
தவான் 72 ரன்....
இதன் பிறகு மனிஷ் பாண்டே ஆட வந்தார். மறுமுனையில் அரைசதத்தை கடந்து மிரட்டிய தவான் தனது பங்குக்கு 72 ரன்கள் (39 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். இறுதிகட்டத்தில் இந்தியாவின் ரன்வேகம் சற்று தளர்ந்து போனது. 220 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோர் கடைசியில் 200 ரன்களை கடப்பதே பெரிய விஷயமாகி விட்டது. பாண்டே, டோனி ஜோடி தடுமாறியதே இதற்கு காரணம். டோனி 16 ரன்களில் (11 பந்து, 2 பவுண்டரி) கிளன் போல்டு ஆனார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. மனிஷ் பாண்டே (29 ரன், 27 பந்து, ஒரு சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா (13 ரன், 7 பந்து, 2 பவுண்டரி) களத்தில் நின்றனர்.
புவனேஷ் அசத்தல்...
பின்னர் பவுண்டரியுடன் தங்களது ரன் கணக்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் ஸ்மட்ஸ் (14 ரன்), கேப்டன் டுமினி (3 ரன்) கேட்ச் ஆனார்கள். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ரீஜா ஹென்ரிக்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து குடைச்சல் கொடுத்தார்.
அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்ட போது, 18-வது ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் அவர் ஹென்ரிக்ஸ் (70 ரன், 50 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), கிளாசென் (16 ரன்), கிறிஸ்மோரிஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கபளகரம் செய்ததுடன், அந்த ஓவரில் பேட்டர்சன் ரன்-அவுட்டும் ஆனார். அத்துடன் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி நம்பிக்கை முழுமையாக தகர்ந்தது.
இந்தியா வெற்றி
20 ஓவர்கள் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் தான். அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.