எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவிதொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை...
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னை, சேலம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் 80 சதவீத தீக்காயமடைந்தனர். மேலும் சிலர் லேசான தீக்காயமடைந்தனர். இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் மற்றும் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தனி இட வசதி மற்றும் படுக்கை வசதி செய்யப்பட்டு சிறப்பு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
முதல்வர் ஆறுதல்...
இந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று தீக்காயமடைந்தவர்களை ஒவ்வொருவராக சென்று பார்த்து ஆறுதல் கூறினர். விபத்து நடந்த விபரங்கள் பற்றியும் அவர்கள் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் காயமடைந்தவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் உத்தரவிட்டார். அப்போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, கே. மாணிக்கம், எஸ்.எஸ். சரவணன், ஏ.கே. போஸ், நீதிபதி, பெரியபுள்ளான் ஆகியோரும் உடன் சென்றனர்.
அனுமதி பெறாமல்...
தீக்காயம்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
காட்டூத்தீ விபத்தில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ட்ரக்கிங் சென்றவர்கள் வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் சென்றதால் விபத்தில் சிக்கியுள்ளார்கள். தற்போது வறட்சி காலம் என்பதால் விலங்குகள் தண்ணீரை தேடி வரும். எனவே மலையேறுவதற்கு இந்த காலக்கட்டத்தில் அனுமதி கிடையாது. ட்ரக்கிங் சென்றவர்கள் வனத்துறையினரிடம் அனுமதியை பெறவில்லை. காட்டுத் தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனிமேல் இப்படிப்பட்ட பயிற்சி மேற்கொள்ளும் போது அரசின் அனுமதியை பெற்று செல்ல வேண்டும்.
ஆபத்தான சூழ்நிலை...
கோடை காலத்தில் மலைப் பகுதிகளில் மரங்கள், இலைகள் காய்ந்து பட்டுப்போய் இருக்கின்ற சூழ்நிலையில் தீ விபத்து ஏற்பட்டால் அது தீவிரமாக பரவக் கூடிய நிலை உருவாகும். எனவே இப்படிப்பட்ட காலங்களில் மலையேறுவதற்கு அரசு அனுமதி கிடையாது. எனவே இனிவரும் காலத்தில் இதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் உரிய அனுமதி பெற்றுத்தான் மலையேற வேண்டும் என்று ஏற்கனவே சட்டம் அமலில் இருக்கிறது. அவற்றையெல்லாம் மீறி சென்றதால்தான் இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் செல்லும் போது அரசின் அனுமதி பெற்று சென்றால்தான் தகுந்த பாதுகாப்பு கொடுக்க முடியும். அதையெல்லாம் இவர்கள் எதையுமே பெற்றுக் கொள்ளாமல் மலையேறி உள்ளதால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பத்துபேரை பலி கொண்ட காட்டுத்தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விபத்தில் உயிரிழந்த பத்துபேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
தேனி மாவட்டம், போடி வட்டம், குரங்கணி மலைப்பகுதியில், 11-ம் தேதி கொழுக்குமலை கிராமத்திலிருந்து குரங்கணி கிராமம் நோக்கி கீழிறங்கிக்கொண்டிருந்த, மலையேற்றம் சென்ற 36 நபர்கள் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில், சிக்கிக் கொண்டனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். இந்தக் கொடிய விபத்து பற்றிய செய்தி அறிந்தவுடன், மலைப்பகுதியில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். எனது வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வனத்துறை அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் வனத் துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குவிரைந்து, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
எனது உத்தரவின் பேரில், தற்போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
26 பேர் மீட்பு...
தீயணைப்புத் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் ஆகியோர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில் இருபத்தாறு நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் வேண்டுகோளினை ஏற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஹெலிகாப்டர் மற்றும் கமாண்டோ படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத் தீயில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவ துறையினருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள்அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனதுவிருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.4 லட்சம் நிதியுதிவி...
காட்டுத் தீயில் சிக்கியவர்களில் சென்னையைச் சேர்ந்த அகிலா, பிரேமலதா,புனிதா, சுபா, அருண், விவின், நிஷா மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய பத்து நபர்கள் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும், வனத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் மலை ஏற்றத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பத்து நபர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்குதலா 50,000/- ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் வழங்கநான் உத்தரவிட்டுள்ளேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
கனமழை: கர்நாடக மாநிலத்தில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
12 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது.