எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை. - சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் செட்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி துவங்கி 5 ஆண்டுகள் படித்து முடித்த முதல் செட்டு மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பட்டங்களை வழங்கி பேசுகையில்,
இன்று சிவகங்கை மண்ணிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நன்னாளாகும். பிற்பட்ட பகுதியைச் சேர்ந்த இம்மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவி அம்மா எண்ணற்ற பலத்திட்டங்களை இம்மாவட்டத்திற்கு வழங்கி செயல்படுத்திய போதிலும் மருத்துவக் கல்லூரி அமைத்து செயல்படுத்தியது மிக உன்னதமான திட்டமாகும். கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் பகுதியிலேயே படித்து சிறந்து விளங்கிட வேண்டுமென தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரி துவக்கியது மட்டுமின்றி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முன்பு இருந்த படிக்கும் மாணவர்களின் சீட்டுகளின் எண்ணிக்கையைவிட 1000 சீட்டு அதிகரித்து மாணவ, மாணவியர்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் எண்ணற்ற மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதனடிப்படையில் இன்று சிவகங்கையில் 5 ஆண்டுகள் படித்து மருத்துவப் பட்டம் பெற்று முதல் செட்டு மாணவ, மாணவியர்கள் எல்லோருடைய ஆசி பெற்று இந்த பட்டப்;படிப்புடன் மேலும் உயர்படிப்பு முடித்து சிறந்த மருத்துவராக பணியாற்றுவதுடன், கிராமப் பகுதிகளிலும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும். பொதுவாக கிராமப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது தங்கள் உடல்நிலையை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்பார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் பதிலளித்து புன்னகையுடன் பேசினால் போதும். எவ்வளவு மருந்துகள் கொடுத்தாலும் அவர்களுக்கு தீராத சந்தேகம் சிறு புன்னகை என்ற அருமருந்தின் மூலம் அவர்களுக்கு நோய் குணமடையும் என்ற நம்பிக்கை உருவாகும். பணிகளில் மகத்தான பணி மருத்துவப் பணிமட்டுமே. இதை நகர்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும் என்பதே மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவாகும். அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் இந்தியாவிலேயே பொது சுகாதாரத்தை சிறப்பாக வழிநடத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் ஆவார். அவர் வழியில் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அம்மா அவர்களின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பராமரிக்கப்பட்டு அதிகளவில் படுக்கை வசதி கொண்ட கட்டடங்கள் கட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தசை சிதைவு அடைந்த மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கிட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான அனைத்துத் திட்டங்களும் அரசு வழங்க தயாராக உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதுடன் இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களும் மருத்துவத்துறையில் சிறந்த சாதனையாளராக வரவேண்டுமென வாழ்த்திக் கொள்கிறேன் என மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவத்தார்.
பின்னர், முதல் செட்டில் பயின்ற 96 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பட்டங்களை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் மரு.ஏ.எட்வின் ஜோ, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வனிதா, துணை முதல்வர் மரு.மல்லிகா, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மருதுபாண்டி, மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
அழுத்தத்தைக் கையாள தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா
11 Jul 2025லண்டன் : அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
-
கீப்பராக துருவ் ஜுரெல்: பி..சி.சி.ஐ.
11 Jul 2025இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான நபர் நிதீஷ் குமார் ரெட்டி : அனில் கும்ப்ளே புகழாரம்
11 Jul 2025லண்டன் : இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு தகுதியான நபர் என்பதை நிதீஷ் குமார் ரெட்டி நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ள
-
என்னை செதுக்கியவர்: கம்மின்சை புகழ்ந்த நிதீஷ் ரெட்டி
11 Jul 2025லண்டன் : இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக காம்பீர் பதில்
11 Jul 2025பெங்களூரு : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விராட் கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் பதிலளித்துள்ளார்.
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகிறார் சுப்மன் கில்? - தேர்வு செய்ய பி.சி.சி.ஐ ஆர்வம்
11 Jul 2025புதுடெல்லி : இலங்கை, ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா: - இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
11 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.