முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றம் இருக்கும் தென் தமிழக கடலோர பகுதிகளில் 3.5 மீ உயரத்துக்கு அலை எழும்ப வாய்ப்பு மீனவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து வானிலை நிலவரம், இயற்கை சீற்றங்களான மழை, வெயில், கடல் கொந்தளிப்பு குறித்து தமிழக அரசு முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் அலையின் சீற்றம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 18 முதல் 22 விநாடி இடைவெளியில் 2 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயர வாய்ப்பு உள்ளதாகவும் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு கடல் அலையின் சீற்றம் இருக்கும் என்றும் தமிழ வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எச்சரித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து