முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை: டோனி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை என அந்த அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார்.

சிறப்பாக பந்துவீசவில்லை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது. தோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:-
ஓட்டு மொத்தமாக இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக பந்து வீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. எந்த பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசவில்லை. இதனால் கடைசி வரை பவுலர்களை மாற்றி கொண்டே இருந்தேன்.

நெருக்கடிதான் ஏற்படும்

அவர்கள் தங்களது வேகம் மற்றும் சரியான திசைகளில் வீசுவதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பேட்ஸ்மேன்களின் பலம் பற்றி பந்து வீச்சாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் நெருக்கடிதான் ஏற்படும். பேட்ஸ்மேன்கள் பலம் அறிந்து பந்து வீசுவது பவுலர்களில் இருந்து வரவேண்டும். நாங்கள் எப்படி பீல்டிங் செய்வோம் என்பதை அறிவேன்.

எங்களுக்கு தேவை

ஆனால், இப்போட்டியில் பீல்டிங் மோசமாக இருந்தது. பீல்டிங்கில் ரன்களை கொடுத்தால் நீங்கள் மெதுவாக செயல்படுகிறீர்கள் என்று அர்த்தம். பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவதில் சிறந்த உதாரணம் மைக்கேல் ஹஸ்சி. அவரை போன்ற பங்களிப்பு எங்களுக்கு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து