முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் முறைகேடு 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின் போது பல்வேறு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த நீட் பயிற்சி நிறுவன உரிமையாளர் அஸ்வினி, ஆர்த்தி ஆகியோர் மீதும், முறைகேட்டுக்கு தரகராக செயல்பட்டதாக மோகித் குமார், மனோஜ் சிக்கா ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.இவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவச் சீட்டு வாங்கித் தருவதாக கூறியிருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து