முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை அரசு விட்டுக் கொடுக்காது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எந்த காலத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும், சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மே 14-ம் தேதி தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் தமிழகத்துக்கான 4 டி.எம்.சி. தண்ணீர் விவகாரத்தில் மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

நம்பத் தயாராக இல்லை

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தாமதம் பற்றி கருத்து தெரிவித்தார். அதாவது, சீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்? என காவிரி விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்தார்.  காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பத் தயாராக இல்லை என்றும் மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். காவிரி வழக்கில், சுப்ரீம கோர்ட்டில் சாதகமான தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை 100 சதவீதம் உள்ளது என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக உரிமையை எந்த காலத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும் கூறினார்.

பிரச்சினையை தீர்க்க குழு

மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசின் நிதி நெருக்கடியை புரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆணவம் இல்லாத அரசுதான் தமிழக அரசு என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர்,  அரசுக்கு வரும் ரூ. 100 வருவாயில் ரூ. 70 அரசு ஊழியர்களுக்காகவே செலவிடப்படுகிறது என்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து