எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர் : நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற எந்த கட்சிக்குமே தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டதை போலவே யாருக்கும் ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இருப்பினும், பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆகிய இரு தரப்பும் ஆட்சி அமைக்க போட்டா போட்டி போடுகின்றன. இரு தரப்பு தலைவர்களும் கர்நாடக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர்.
வாக்குசேகரிப்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியாக இருந்த பாரதீய ஜனதாவும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின. குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளமும் தேர்தல் களத்தில் குதித்தது. இதனால் இந்த தேர்தலில் மும்மனை போட்டி நிலவியது. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார். மேலும், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ஸ்மிருதி இராணி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா போன்ற தலைவர்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தனர்.
72 சதவீத வாக்குகள்
அதேபோல், மீண்டும் ஆட்சியை கைபற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டது. இதற்க்காக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது அன்னையும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க, காங்கிரஸ் இடையே பிரச்சாரத்தில் கடும் போட்டி நிலவியது. போதாக்குறைக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இப்படி கிட்டத்தட்ட 3 வாரம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரசாரம் கடந்த 10-ம் தேதி ஓய்ந்தது. மொத்தம் 222 சட்டமன்ற தொகுதிகளில் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. தேர்தலில் நாங்களே வெற்றி பெறுவோம் என்று இருதரப்பினருமே மார்தட்டி வந்தனர். ஆனால் முன்னதாக இந்த தேர்தலில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
நிலைமை மாறியது
இந்நிலையில் நாடே ஆவலுடன் எதிர்பார்த்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதில் இருந்தே பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலன தொகுதிகளில் முன்னிலையில் இருந்தனர். இதனால் பாரதீய ஜனதா வெற்றி பெற்று விட்டதாகவும், எடியூரப்பாவே முதல்வராக போகிறார் என்றும் முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. எடியூரப்பாவுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை கூற தொடங்கினார்கள். ஆனால் பிற்பகலுக்கு பிறகு நிலைமை மாறியது. காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததை விட அதிக இடங்களை கைப்பற்றியதாக செய்திகள் வரத் தொடங்கின.
பா.ஜ.க 104 இடங்கள்
இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த 222 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாரதீய ஜனதா கட்சி 104 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 78 இடங்களையும், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்களையும் கைப்பற்றினர். 104 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
கவர்னருடன் சந்திப்பு
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. அந்த மேஜிக் நம்பரான 112 தொகுதிகள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை இந்த தேர்தல் முடிவு நினைவூட்டியது. தனி மெஜாரிட்டி யாருக்குமே கிடைக்காத நிலையிலும் பா.ஜ.க., காங்கிரஸ் இரு தரப்பினருமே ஆட்சி அமைக்க வியூகம் வகுத்தனர். நேற்று மாலை மாநில கவர்னர் வஜூபாய் வாலாவை பா.ஜ.க. மூத்த தலைவர் எடியூரப்பா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
குமாரசாமியும் சந்திப்பு
இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவெடுத்தது. குறிப்பாக, பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவெடுத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, குமாரசாமியின் தந்தை தேவகவுடாவுடன் பேச்சு நடத்தினார். இறுதியில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டது. இதையடுத்து குமாரசாமியும் நேற்று மாலை கவர்னர் வஜூபாய் ரூடாபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
14 ஆண்டுகளுக்கு பிறகு...
எங்களுக்குள் கருத்து முரண்பாடு எதுவும் இல்லை. ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த 2004-ம் ஆண்டு இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்ட போது மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. குமாரசாமியை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முழு மனதாக ஒப்புக் கொண்டுள்ளது. கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவும் உரிமை கோரியுள்ளார். குமாரசாமியும் உரிமை கோரியுள்ளார். இந்த இருவரில் யாரை கவர்னர் அழைக்கப் போகிறார் என்பது இன்று தெரியும்.
பிரதமர் மோடி நன்றி
இதற்கிடையில் டெல்லியில் இருந்து பா.ஜ.க. மூத்த அமைச்சர்கள் பெங்களூர் விரைந்தனர். இன்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், பா.ஜ.க. மூத்த அமைச்சர்கள் புதிய அரசு அமைப்பது பற்றி மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த நிலையில் தேர்தல் தோல்வியை அடுத்து அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கர்நாடக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று அடிக்கடி வாய்கிழிய கத்தும் வட்டாள் நாகராஜ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.