எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: காவிரி நீர் பங்கீட்டு குழுவிற்கு 'மேலாண்மை வாரியம்' என்று பெயர் சூட்ட சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 'இறுதி அதிகாரம் வாரியத்திற்கே' என்று திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வரைவு திட்டம்...
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு இரு முறை அவகாசம் கேட்ட நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் 14 பக்க வரைவு செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் 16-ம் தேதிக்குள் தங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் காவிரி வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார்.
கர்நாடகம் கோரிக்கை
கர்நாடகத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷியான் திவான், கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடிந்திருப்பதால், அங்கு புதிய அரசு அமையாத சூழல் நிலவுகிறது, வரைவு செயல்திட்டம் குறித்து மற்ற மாநிலங்களைப் போல் நாங்களும் ஆலோசனை அளிக்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக இந்த வழக்கை நீங்கள் பலமுறை ஒத்தி வைத்துள்ளீர்கள். இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கப் போகிறது. இதில் நாங்களும் ஆக்கப்பூர்வமாக கருத்து கூற உரிமை இருக்கிறது. ஆதலால் போதுமான அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஜூலை மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கோரிக்கை நிராகரிப்பு
அப்போது தமிழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் கூறுகையில், கர்நாடகத்தில் அரசு செயல்படவில்லை என்று கூறுவது தவறு. ஜூலை மாதம்வரை நீதிமன்றம் காத்திருக்கக் கூடாது, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையே கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள் வரைவு செயல் திட்டத்தில் திருத்தங்கள் செய்யக்கோரி ஆலோசனை அளித்திருந்தன. அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. அதேசமயம், ஜூலை மாதத்துக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
காவிரி வாரியத்திற்கே....
வரைவு செயல்திட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டால் இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற அம்சத்தையும் ஏற்க முடியாது. மத்திய அரசின் முடிவுக்கே கட்டுப்பட வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இறுதித் தீர்ப்பின்படி காவிரி நிதிநீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புக்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது, இறுதி முடிவும் காவிரி வாரியமே எடுக்க முடியும். மத்திய அரசுக்கு கிடையாது. நாங்கள் அளித்த தீர்ப்பை மத்திய அரசு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு விளக்கம்
இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்தியஅரசுக்கு இருந்தால், அதை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் என்று புதுச்சேரி அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி மிஸ்ரா, மத்திய அரசின் இந்த அம்சம் இறுதித்தீர்ப்புக்கு எதிரானதாகும் என்றனர். அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வேணுகோபால் பதில் அளிக்கையில், மத்திய அரசுக்கு இறுதி அதிகாரம் என்ற அம்சம் என்பது ஒரு பாதுகாப்பு வால்வு போன்றதாகும். காவிரி ஆணையத்தின் உத்தரவுக்கு பணியாவிட்டால், ஆணையம் மத்திய அரசை நாடி அதன்மூலம் செயல்படுத்த வைக்கலாம் என்பதாகும் என்றார்.
கோரிக்கை ஏற்பு...
ஆனால், அதற்கு தமிழகத்தின் வழக்கறிஞர் சேகர் நாப்தே, ராக்கேஷ் திரிவேதி, ஜி.உமாபதி ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 2-ம் கட்ட அதிகார அமைப்பு ஒன்று இருக்கத் தேவையில்லை. காவிரி ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றனர். காவிரி மேலாண்மை அமைப்பு என்ற பெயருக்கு பதிலாக வாரியம் என்று பெயரை மாற்ற தமிழகம் விடுத்த கோரிக்கையை கர்நாடகமும், மத்திய அரசும் ஏற்றுக் கொண்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை12 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 12 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு
08 May 2024சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை கோர்ட் காவல் நீட்டிப்பு
08 May 2024பெங்களூரு : பெண்ணை கடத்தியதாக கைது செய்யப்பட்ட ம.ஜ.த.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
08 May 2024சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
சர்ச்சை பேச்சு எதிரொலி: காங்.கட்சி பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா திடீர் ராஜினாமா
08 May 2024புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து சாம்பிட்ரோடா பதவி விலகி உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்த 'இன்டியா' கூட்டணி கட்சிகள்: அமித் ஷா
08 May 2024ஹர்தோய், வாக்கு வங்கியை காத்துக்கொள்ள ராமர் கோயில் நிகழ்ச்சியை புறக்கணித்தனர் 'இன்டியா' கூட்டணி கட்சிகள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உ.பி.யில் பிரசாரத்தின் ப
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
நடுவர்களிடம் வாக்குவாதம்: ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்
08 May 2024புதுடெல்லி : டெல்லிக்கு எதிரான போட்டியில் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்ப
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
மும்பையில் அதிர்ச்சி சம்பவம்: சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர் பலி
08 May 2024மும்பை : மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.