முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்ஜான் தினத்தன்று நிதி ஆயோக் கூட்டம் பங்கேற்கப் போவதில்லை என்கிறார் மம்தா

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : ரம்ஜான்  பண்டிகை தினத்தன்று நீதி ஆயோக் கூட்டம் நடைபெறவிருப்பதால், அதில் பங்கேற்கப்போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இது குறித்து கொல்கத்தாவில் அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும்  16-ம் தேதி, நிதி ஆயோக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினம், ரம்ஜான் பண்டிகை தினமாகும். அந்த நாளில் நான் எப்படி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்? எனக்கு எல்லா பண்டிகைகளும் முக்கியம். துர்கா பூஜையை போன்றே ரம்ஜான் பண்டிகையும் எனக்கு முக்கியமாகும். அந்த நாளில் எனது மக்களுடன் நான் இருப்பேன் என்றார் அவர்.

ரம்ஜான் பிறை வேறு நாளில் தெரிந்தால், பண்டிகை தினம் மாறும். அப்படியிருந்தால், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மம்தா பதிலளிக்க மறுத்து விட்டார். மேலும், தனது சார்பில் வேறு யாரையும் அனுப்பி வைக்கப் போவதில்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து