முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 20 பேர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.ஒரு லட்சம் நிவாரண உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கோயம்புத்தூர் ...

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மகாராஜபுரம், மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜின் மனைவி லூர்து, மாரியப்பனின் மனைவி கருப்பாயி, வெள்ளைச்சாமியின் மகன் தங்கம், அவரது மனைவி சாந்தி மற்றும் பால்ராஜின் மனைவி மாரியம்மாள் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியையும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை கிராமத்தை சேர்ந்த சிராஜ்தீன் மகன் அன்சாத் பழம் வெட்ட முயன்ற பொழுது தவறுதலாக காலில் பட்டு இரத்தப்போக்கு அதிகமாகி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

வேதாரண்யம்...

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளுர் கிராமத்தைச் சேர்ந்த  தண்டபாணியின் மகன் சக்தி மற்றும் மகாராஜனின் மகன் சந்தோஷ் ஆகியோர் குளத்தில் குளிக்கும் போதுசேற்றில் சிக்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியையும், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் ரா. பிரவின்குமார், சிவானந்தம் மகன் பரத், அருள்ராஜின் மகன் யுகேந்திரன், பொன்னுதுரையின் மகன் கனிஷ்கர் மற்றும் சுப்பிரமணியனின் மகன்  இராஜாமணி ஆகியோர் கடலில் படகில் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,

தஞ்சாவூர் - ஈரோடு

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் கிராமத்தை சேர்ந்த ஆனந்தனின் மனைவி ரத்தினச் செல்விபாம்பு கடித்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், செ.புதூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரின் மகன் ராஜேஸ் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷின் மகன்விக்னேஷ் ஜேடர்பாளையம் ஆற்றில் மூழ்கிஉயிரிழந்தார் என்ற செய்தியையும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கோட்டுவீராம்பாளையம் கிராமம், பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற. சலீமின் மனைவி பர்வீன் மற்றும் மகள் ரஹமத்துன்னிஷா, அப்துல் ஜப்பாரின் மகள் பிர்தோஸ் மற்றும் பத்ருன்னிஷா ஆகிய நான்கு நபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தலா ரூ.1 லட்சம் நிதி...

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 20 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 20 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து