முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமாம்

சனிக்கிழமை, 16 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

இந்தியா வில் மிகக் கடுமையான நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இறக்கின்றனர். இந்தியாவில் நீர் பற்றாக்குறை மிக மோசமான வகையில் அதிகரித்து வருகிறது.

2030-ம் ஆண்டில் தண்ணீர் தேவை, தண்ணீர் இருப்பை விட மூன்று மடங்காக அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்கும். ஜிடிபியில் 6 சதவீத இழப்பு உருவாகும் என்று கூறியுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவிக்கையில், 2020-ம் ஆண்டுக்குள் 21 முக்கிய நகரங்களின் நிலத்தடி நீர் தீர்ந்துவிடும். இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து