முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலமேட்டில் கும்பாபிஷேக விழா

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம் பாலமேட்டில் சாத்தாவுராயன்,காளியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா நடந்தது.முதல் இரண்டுநாட்கள் யாகசாலையில் பூஜைகள் நடந்தது. இதில் மூன்றாம் நாள் காலையில் பூஜைகளும் தொடர்ந்து அங்கிருந்து அழகர்மலை,கங்கை.காவேரி,காசி,ராமேஸ்வரம்,உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தகுடங்கள் மேள தாளங்கள், முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
   அங்கு பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க கலசத்தில் குடம் குடமாக தீர்த்தம்  ஊற்றப்பட்டது.வானத்தில் அப்போது கருடன் வட்டமிட்டது.கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.அவர்களுக்கு பூஜை மலர்களும்,புனிததீர்த்தமும் வழங்கப்பட்டது.முன்னதாக விநாயகர்,முருகன்,உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பாலமேடு 24 மனை தெலுங்குபட்டிசெட்டி உறவின்முறை சங்கத்தின் தலைவர்முருகேசன்,துணைதலைவர்அழகர்சாமி,செயலாளர் செல்வராஜ்,பொருளாளர் தனசேகரன்,கௌரவ ஆலோசகர் வீரையா, மற்றும்நிர்வாகிகள்,விழாகுழுவினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து