முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபினி அணையில் இருந்து மேலும் நீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு மேலும் உயர்ந்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, கபினி அணையில் இருந்து இதுவரை 15 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று 23,000 கன அடியாக உயர்ந்துள்ளது. உபரி நீரின் அளவு... கபினி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், அணையின் பாதுகாப்புக் கருதி காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவை கர்நாடக அரசு உயர்த்தியுள்ளது. கபினி அணையின் முழுக் கொள்ளளவு 84 அடியாக இருக்கும் நிலையில், தற்போது அணையில் 82.25 அடி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. மழை காரணமாக தற்போது கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 15,200 கன அடியாக அதிகரித்திருப்பதால், நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 அடியை எட்டியது கபினியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியில் இருந்து தற்போது 4,586 கன அடியாகக் குறைந்துள்ளது. தற்போது கபினியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்திருப்பதால், நீர் வரத்து மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3,500 கன அடியாக... தற்போது அணையின் நீர்மட்டம் 50.32 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அணையில் 18.01 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் நீர்வரத்துக் குறைந்திருப்பதை அடுத்து ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர் வரத்து 3,500 கன அடியாகக் குறைந்தது. இதனால் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து