முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஐ.சி.சி.

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

அனில் கும்ப்ளே தலைமையினான ஒரு குழுவை ஐ.சி.சி.அமைத்தது, ஐ.சி.சி.. அந்த குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. டப்ளினில் நடந்த ஐ.சி.சி.யின் வருடாந்தர கூட்டத்தில் தண்டனைகளைத் திருத்தி முடிவெடுத்திருக்கிறார்கள். எதிரணி வீரரை திட்டுவது 2 மற்றும் 3ஆம் நிலை குற்றம். ஏமாற்றுதல், பந்தை சேதப்படுத்துதல் 2 மற்றும் 3ஆம் நிலைக் குற்றம். தனிப்பட்ட முறையில் சீண்டுவது 2 மற்றும் 3ஆம் நிலை குற்றம். ஆபாசமாகத் திட்டுவதும் நடுவர் முடிவை அவமதிப்பதும் முதல் நிலை குற்றம். இவை புதிய குற்றங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பந்தின் தன்மையை மாற்றுவது இரண்டாம் நிலை குற்றமாக இருந்தது. இப்போது 3 ஆம் நிலைக் குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தை செய்தால், 6 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். அதோடு வீரர்களுக்கான அப்பீலுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்பீல் சாதகமாக முடிந்தால் மட்டுமே அந்த தொகை திருப்பிக் கொடுக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து