எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
							
						 ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 5 வார்டில் வசிப்பவர் ராமச்சந்திரன் (69). இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகரத்தினம் (71) ஆசிரியர் தொடக்க கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு வெங்கடேசன் நரசிம்ம பாண்டியன் (42) மகனும்  ஜெயஸ்ரீ பத்துமா (35) என்ற மகளும் உள்ளனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி நாகரத்தினம் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்மீக ரத யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 
இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (65) அவரது மனைவி மெய்யம்மை (62), சிவக்குமார் (52) மனைவி நீலோத் பாலாம்மாள் (45) ஆகியோர்களுடன்  இணைந்து இமய மலையில் உள்ள கைலாஷ் சுவாமியை தரிசனம் செய்ய ஆன்மீக பயணத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் நேபாளம் எல்லை அருகே உள்ள பகுதியில் யாத்திரீகளுடன் செல்லும் போது கடந்த 2ம் தேதி ராமச்சந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடன் சென்றவர்கள் முதலுதவி அளித்தும் பயனின்றி இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து தூதரகத்தின் மூலமாக உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆண்டிபட்டியில் உள்ள அவரது மருமகள் சரணியா என்பவர் எனது மாமனாரின் உடலை மீட்டுத்தருமாறு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதனடிப்படையில் மத்திய - மாநில அரசுகளின் உதவியுடன் இறந்த ராமச்சந்திரனின் உடல் கடந்த 3ம் தேதி  காத்து மண்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான மூலமாக டெல்லி கொண்டு வரப்பட்டு, சென்னைக்கு விமானம் மூலமாக உடலை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடலை சென்னையிலிருந்து அமரர் ஊர்தி மூலமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு  கொண்டு வந்தனர். அவரது உடலை கண்டு  உறவினர்களும், பொதுமக்களும் கதறி அழுதனர்.
       இதனையடுத்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்தீபன், அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் ஆகியோர் ராமச்சந்திரன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
      இதனையடுத்து ஆண்டிபட்டியில் உள்ள மயானத்தில் ராமச்சந்திரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
      இது குறித்து இறந்த ராமச்சந்திரனின் மகன் வெங்கடேசன் கூறியதாவது. எனது பெற்றோர் கைலாஷ் மானசரோவர் பனி லிங்கத்தை தரிசிக்க யாத்திரையாக சென்றனர். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக எனது தந்தை திபெத்தை அடுத்த தார்ஜன்ட்டில் உயிரிழந்தார்.இதனையடுத்து சீன தூதரகம் மூலம் பெங்களுரில் உள்ள எனது சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அவர் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது. உடன் நான் பெங்களூரு சென்று குடும்பத்துடன் கல்கத்தா சென்று, அங்கிருந்து நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு சென்றோம். சீன அரசின் தூதரகம் மூலம் திபெத்தில் எனது தந்தையின் உடலில் இருந்த நீரை வெளியேற்றி, பதப்படுத்தி காத்மாண்டுக்கு அனுப்பினர். அங்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய தூதரகம் மூலம் டெல்லிக்கு விமானம் மூலம் உடல் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னை வந்து , தற்போது சொந்த ஊரான ஆண்டிட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மிகவும் சோகமயமான சூழலில் எனது தந்தையின் உடலுடன் வந்தது நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டது. இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது. இருப்பினும் விரைந்து செயல்பட்டு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
              
          கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago  | 
                  
              
          வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago  | 
                  
              
          மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago  | 
              
-   
          
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -   
          
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 -   
          
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
 -   
          
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
 -   
          
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
 -   
          
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
 -   
          
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
 -   
          
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
04 Nov 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியது.
 -   
          
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 -   
          
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
 -   
          
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
 -   
          
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 -   
          
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 -   
          
என்னை கொலை செய்ய முயற்சி: பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் பரபரப்பு புகார்
04 Nov 2025சேலம், அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை பா.ம.க. எம்.எல்.ஏ., அருள் முன்வைத்துள்ளார்.
 -   
          
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
04 Nov 2025சென்னை: சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியின் போது பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 -   
          
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 -   
          
இந்த ஆண்டில் மட்டும் ஐ.டி. நிறுவனங்களில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்
04 Nov 2025சென்னை: ஐ.டி. நிறுவனங்களில் இந்த அண்டில் மட்டும் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 -   
          
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
 -   
          
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
 -   
          
கிட்னி மோசடி வழக்கு: இ.பி.எஸ் குற்றச்சாட்டு
04 Nov 2025சென்னை: கிட்னி மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
 -   
          
தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: துபாய்-மங்களூரு விமானம் ரத்து
04 Nov 2025துபாய்: தொழில்நுட்க கோளாறு காரணமாக துபாய் - மங்களூரு விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 -   
          
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? மனோஜ் பாண்டியன் விளக்கம்
04 Nov 2025சென்னை, தி.மு.க.வில் இணைந்தது குறித்து மனோஜ் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
 -   
          
ம.பி.யில் பயங்கரம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் பலி
04 Nov 2025போபால்: மத்தியபிரதேசம் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
 -   
          
காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்
04 Nov 2025சென்னை: காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 -   
          
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
 



