எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி 5 வார்டில் வசிப்பவர் ராமச்சந்திரன் (69). இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகரத்தினம் (71) ஆசிரியர் தொடக்க கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு வெங்கடேசன் நரசிம்ம பாண்டியன் (42) மகனும் ஜெயஸ்ரீ பத்துமா (35) என்ற மகளும் உள்ளனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி நாகரத்தினம் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்மீக ரத யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (65) அவரது மனைவி மெய்யம்மை (62), சிவக்குமார் (52) மனைவி நீலோத் பாலாம்மாள் (45) ஆகியோர்களுடன் இணைந்து இமய மலையில் உள்ள கைலாஷ் சுவாமியை தரிசனம் செய்ய ஆன்மீக பயணத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் ராமச்சந்திரன் நேபாளம் எல்லை அருகே உள்ள பகுதியில் யாத்திரீகளுடன் செல்லும் போது கடந்த 2ம் தேதி ராமச்சந்திரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடன் சென்றவர்கள் முதலுதவி அளித்தும் பயனின்றி இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து தூதரகத்தின் மூலமாக உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உடலை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆண்டிபட்டியில் உள்ள அவரது மருமகள் சரணியா என்பவர் எனது மாமனாரின் உடலை மீட்டுத்தருமாறு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதனடிப்படையில் மத்திய - மாநில அரசுகளின் உதவியுடன் இறந்த ராமச்சந்திரனின் உடல் கடந்த 3ம் தேதி காத்து மண்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான மூலமாக டெல்லி கொண்டு வரப்பட்டு, சென்னைக்கு விமானம் மூலமாக உடலை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து உடலை சென்னையிலிருந்து அமரர் ஊர்தி மூலமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வந்தனர். அவரது உடலை கண்டு உறவினர்களும், பொதுமக்களும் கதறி அழுதனர்.
இதனையடுத்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்தீபன், அ.ம.மு.க. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் ஆகியோர் ராமச்சந்திரன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி , குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதனையடுத்து ஆண்டிபட்டியில் உள்ள மயானத்தில் ராமச்சந்திரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து இறந்த ராமச்சந்திரனின் மகன் வெங்கடேசன் கூறியதாவது. எனது பெற்றோர் கைலாஷ் மானசரோவர் பனி லிங்கத்தை தரிசிக்க யாத்திரையாக சென்றனர். அப்போது உடல் நலக்குறைவு காரணமாக எனது தந்தை திபெத்தை அடுத்த தார்ஜன்ட்டில் உயிரிழந்தார்.இதனையடுத்து சீன தூதரகம் மூலம் பெங்களுரில் உள்ள எனது சகோதரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. அவர் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது. உடன் நான் பெங்களூரு சென்று குடும்பத்துடன் கல்கத்தா சென்று, அங்கிருந்து நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு சென்றோம். சீன அரசின் தூதரகம் மூலம் திபெத்தில் எனது தந்தையின் உடலில் இருந்த நீரை வெளியேற்றி, பதப்படுத்தி காத்மாண்டுக்கு அனுப்பினர். அங்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய தூதரகம் மூலம் டெல்லிக்கு விமானம் மூலம் உடல் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னை வந்து , தற்போது சொந்த ஊரான ஆண்டிட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மிகவும் சோகமயமான சூழலில் எனது தந்தையின் உடலுடன் வந்தது நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டது. இந்த நிலை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது. இருப்பினும் விரைந்து செயல்பட்டு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
தி.மு.க. கூட்டணிக்குதான் வெற்றி: கனிமொழி எம்.பி.
05 Jul 2025திருநெல்வேலி : வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணிக்கு தான் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.