எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன்: இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து பேட் செய்ய வேண்டும் என்று, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியக் கேப்டன் விராட் கோலியும், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர், ஸ்விங் மன்னன் ஜேம்ஸ் ஆன்ட்ர்சன் ஆகியோர் இந்தத் தொடர் அனைவரின்கவனத்தையும் ஈர்த்துப் பேசும் பொருளாக மாறி இருக்கிறார்கள்.
ஏனென்றால், கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்து வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையில் இங்கிலாந்து வந்திருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கோலி, 5 டெஸ்ட் போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இவரின் டெஸ்ட் சராசரி 13 ரன்கள் மட்டுமே கடந்த தொடரில் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், கடந்த தொடரில் கோலி ஆட்டமிழந்ததில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆன்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பெரும்பாலும் ஆப்-ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முற்பட்டு, அது கேட்சாக மாறி விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த தொடரிலும் ஆன்டர்சன் பந்துவீச்சு இந்திய அணிக்கு சிம்மசொப்னமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆன்டர்சன் பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து பேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இஎஸ்பின் தளத்தில் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கு பின் விராட் கோலியின் பேட்டிங் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார், பேட்டிங்கில் பல்வேறு தொழில்நுணுக்கங்களை கற்றுள்ளார்.
ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்று வரும் போது, ஆடுகளமும், பந்துவீச்சும் மாறுபடும். அதிலும் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துவீச்சில் கடந்த தொடரில் விக்கெட்டை அதிகமாகக் கோலி இழந்திருப்பதால், மிகுந்த கவனத்துடனே எதிர்கொள்ள வேண்டும்.
ஆன்டர்சன் வீசும் பெரும்பாலான பந்துகள் ஆஃப்சைடை விலக்கியே செல்லும். அந்தப் பந்துகளை அடித்து விளையாடும் வகையில் பேட்ஸ்மேன்களை தூண்டிவிடும். ஆனால், அந்து பந்துகளை விராட் கோலி, தொடவே கூடாது. அதை விட்டுவிட வேண்டும்.
ஏனென்றால், அவுட்சைட் ஆஃப் சைட் பந்துகளைத் தொட்டால் எங்கு கேட்சாக மாறும் என்பது அறிந்தே அதிகமான பீல்டர்களை ஸ்லிப் திசையிலும், கல்லி பாயின்டிலும் நிறுத்தி இருப்பார்கள். ஏறக்குறைய 4 ஸ்லிப் பீல்டர்கள் வரைகூட நிறுத்தக்கூடும்.
மேலும், அந்தபோன்ற பந்துகளைக் கவர் டிரைவ் ஆட விராட் கோலி முயற்சித்தால் நிச்சயம் விக்கெட்டை இழந்துவிடுவார். ஏனென்றால், கவர் டிரைவ் ஆடும்வகையில் ஆன்டர்சன் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்த முனைவார். ஆனால், அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அதிலும், ஆன்டர்சனைப் பொருத்தவரை விராட் கோலி அடிக்கும்வகையில் அவரின் பந்துவீச்சு வராது.
அதற்கு பதிலாக விராட் கோலி அதுபோன்ற பந்துகளை ஸ்கொயர் டிரைவ் ஷாட்களாக மாற்றுவது பாதுகாப்பானது என நினைக்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு கவர் டிரைவ் விரும்பி. ஆனால், இங்கிலாந்தில், அதிலும் ஆன்டர்சன் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஆடுவது கோலிக்கு ஆபத்தானது.
அதுமட்டுமல்லாமல், ஆன்டர்சன் வீசும் பந்து தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் சைட் வந்துகொண்டிருக்கிறது என்று கோலி நினைத்தால் அது தவறு. திடீரென்று ஒரு பந்து இன்ஸ்விங் ஆகிய ஸ்டெம்பை நோக்கி துல்லியமாகப் பாயும். அந்த பந்தையும் சரியாகத் தடுத்து விளையாடக் கோலி தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கால்காப்பில் வாங்கிக் கோலி வெளியேற வேண்டியது இருக்கும்.
தென் ஆப்பிரிக்கத் தொடரில் வெர்னன் பிலாண்டர் இதுபோன்று விராட் கோலிக்கு ஆப் திசையில் வீசி, ஒருபந்தை இன்ஸ்விங் மூலம் உள்ளே இழுத்து நெருக்கடி கொடுத்தார் என்பது நினைவிருக்க வேண்டும்.
கோலிக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், ஆப்-சைடுக்கு வெளியே செல்லும் அனைத்துப் பந்துகளையும் கோலிவிட்டுவிட வேண்டும். அதேசமயம், இன்ஸ்விங் ஆகும் ஒரு பந்துக்காகவும் காத்திருந்து கவனமாகவும் விளையாட வேண்டும் அதற்கான மனநிலையைக் கோலி உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
தென் ஆப்பிரிக்கத் தொடரில் பிலாண்டர் பந்துவீச்சில் செய்த தவறுகளை விராட் கோலி இந்த முறை ஆன்டர்சன் பந்துவீச்சில் செய்துவிடக்கூடாது. ஏதாவது ஒரு பந்து இன்ஸ்விங் ஆகி ஸ்டெம்பை நோக்கி வரும்போது, காலை முன்நோக்கி எடுத்து வைத்து விளையாடுவது ஆபத்து. ஆன்டர்சன் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஆடுவதைத் தவிர்த்து, ஸ்கொயர் டிரைவ் ஷாட்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு மஞ்ச்ரேக்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.