முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் சண்டை: பலியான தீவிரவாதிகள் எண்ணிக்கை 5-ஆனது

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீர் எல்லைப் பகுதியில் நேற்று காலை நடைபெற்ற சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் இரவிலிருந்து நடைபெற்று வரும் இந்த சண்டையில் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள தீவிரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியில் இருந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் நேற்று காலை சோபியன் மாவட்டத்தில் கில்லோரா கிராமத்தில் நடைபெற்ற சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவரின் உடல் அவர் லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த உமர் மாலிக் என்று அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்தவரிடமிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கழித்து காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இதுவரை 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவரது உடல் மட்டும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து