எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
இங்கிலாந்துடன் டி 20, ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியா வென்ற நிலையில், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து வென்றது. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் எட்பாகஸ்டனில் நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது. கேப்டன் விராட் கோலி மட்டுமே அந்த டெஸ்டில் தன்னந்தனியாக போராடி அணியை தோல்வியில் இருந்து மீட்க முயன்றார். இந்திய அணியில் அஸ்வின், இஷாந்த், உமேஷ் ஆகியோரும், இங்கிலாந்தில் ஸ்டோக்ஸ், சாம் கரன், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டு இதில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதே நேரத்தில் முதல் வெற்றியுடன் தந்த ஊக்கத்துடன் இங்கிலாந்து இப்போட்டியை எதிர்கொள்கிறது.
லார்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் புல்தரையுடன் காணப்படுகிறது. இது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக பந்தை ஸ்விங் செய்ய முடியும். கடைசியாக இங்கு இரு அணிகளும் மோதிய டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது.
இங்கிலாந்தில் நிலவும் வரும் சூழ்நிலை, மைதானத்தின் தன்மையை இந்திய வீரர்கள் அறிந்து கொண்டாலும், முடிவில் சோபிக்க தவறி விடுகின்றனர். இந்தியாவுக்கு கவலை தருவதாக மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை அமைந்துள்ளது. 3-வது பேட்ஸ்மேன் நிலை கவலை தருவதாக உள்ளது. அந்த இடத்தில் அநேகமாக புஜாரா களமிறக்கப்படலாம். மேலும் லோகேஷ் ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
கேப்டன் விராட் கோலி 4-வது பேட்ஸ்மேனாகவும், ரஹானே 5-வது பேட்ஸ்மேனாகவும் களமிறங்குவர். ரஹானே மீண்டும் தனது பார்மை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க வீரர்களான முரளி விஜய், ஷிகர் தவன் ஆட்டமும் எடுபடவில்லை. தவன் பார்மில் இல்லாத நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் வாய்ப்பு தரப்படும்.
டெஸ்ட் ஆட்டங்களில் முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். நான்கு நாள் ஓய்வில் இந்திய அணி முதல் டெஸ்டில் தான் புரிந்த தவறுகளை சரி செய்யும் வகையில் உள்ளது. அணி நிர்வாகத்துக்கும் இந்த ஓய்வு இரண்டாம் டெஸ்ட்டுக்கு திட்டமிட சரியான வாய்ப்பைத் தந்துள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் அதிகளவில் பேசப்பட்டார். ஆனால் அஸ்வின் தனது அபார பந்துவீச்சால் 7 விக்கெட்டை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இரண்டாவது ஆட்டத்திலும் அஸ்வின் சுழற்பந்து வீச்சில் பிரதான இடத்தை வகிப்பார். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். உமேஷ் சரியாக பந்துவீசாத நிலை உள்ளது. காயத்தால் அவதிப்படும் புவனேஷ்குமார், பும்ரா லார்ட்ஸ் டெஸ்டில் இடம் பெறும் வாய்ப்பு இல்லை.
விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக்கே தொடர்ந்து நீடிப்பார். பேட்டிங்கிலும் கோலிக்கு உறுதுணையாக செயல்பட்டார். ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது.
இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமாகும். புஜாரா அணியில் சேர்க்கப்பட்டால் பேட்டிங் வரிசை வலிமை பெறும். இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசுவது இங்கிலாந்துக்கு பாதகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இஷாந்துக்கு துணையாக உமேஷ், சமி ஆகியோர் சரியான அளவில் பந்து வீசுகின்றனர். கூடுதலாக கேப்டன் கோலி அபார பார்மில் உள்ளது அணிக்கு பெரிய பலமாகும். மொத்தத்தில் லார்ட்ஸ் மைதானம் இந்தியாவுக்கு ராசியானது என்பதால் இரண்டாம் டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.