முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8.2 ரிக்டரில் பிஜூ தீவில் பயங்கர பூகம்பம் - இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

சிட்னி : பிஜூ தீவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 என்று பதிவானதாகக் கூறிய யு.எஸ். புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  அதி ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி அலைகளுக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை 12:19 -க்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் தலைநகர் சுவாவுக்கு 361 கி.மீ. கிழக்காகவும், 559 கி.மீ. ஆழத்திலும் இருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ். தெரிவித்துள்ளது. பசிபிக் ரிங் ஆப் பயர் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு கண்டப் பெருந்தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அதி ஆற்றலை வெளிப்படுத்தும் பகுதியாகும். முதலில் இது 8.0 பூகம்பம் என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு 8.2 ஆக அதிகரிக்கப்பட்டது. அதி ஆழத்தில் ஏற்படவில்லையெனில் இது மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கும்.

இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக லோம்போக் தீவு பூகம்பத் தாக்குப் பகுதியாக மாறியுள்ளது. நேற்று 6.3 என்ற ரிக்டர் அளவில் பதிவான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு லோம்போக்கின் பெலண்டிங் நகருக்கு மேற்கு தென் மேற்காக மையம் கொண்டிருந்தது. இது ஆழம் குறைவாக 7 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. கிழக்கு லோம்போக்கில் இது கடுமையாக உணரப்பட்டது என்று அங்குள்ள மக்கள் ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து