முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் அதிபர் மாளிகை மீது ஏவுகணை தாக்குதல்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

காபூல் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக ஆப்கன் அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த நாட்டு அதிபர் மாளிகையைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. சண்டை நிறுத்தத்தை ஏற்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில், தலிபான் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

காபூலுக்கு அருகே, ரெக்கா கானா என்ற பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தைக் கைப்பற்றிய பயங்கரவாதிகள், காபூல் நகரை நோக்கி சிறிய வகை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அதிபர் மாளிகைக்கு அருகே சில ஏவுகணைகள் வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர்.

இது குறித்த தகவலறிந்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து