எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி, -தேனி மாவட்டம் தேவராம் அருகே சுத்தகங்கை ஓடையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து புறப்பட்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழியெங்கும் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம், போடிநாயக்கனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகவே இருந்து வந்தன. இப்பகுதி விவசாயிகள் மழை காலங்களில் மட்டுமே விவசாயம் பார்த்து வந்தனர். மற்ற நேரங்களில் மானாவாரி விவசாயமான மக்காசோளம் உள்ளிட்ட சில பயிர்களை மட்டுமே விவசாயம் செய்து வந்தனர். இதுபோன்ற மானாவாரி விவசாயங்களில் போதிய வருமானம் கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் முல்லை பெரியார் ஆற்றிலிருந்து 18ம் கால்வாயில் வரும் தண்ணீர் லோயர்கேம்ப், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், நாகலாபுரம் வழியாக தேனி வீரபாண்டி அருகேயுள்ள முல்லைபெரியார் ஆற்றில் கலக்கிறது. எனவே 18ம் கால்வாயை தேவாரம் பகுதியிலிருந்து பொட்டிபுரம், ராசிங்காபுரம், சிலமலை, மேலச்சொக்கநாதபுரம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 34 கிராமங்களின் வழியாக நீட்டிப்பு செய்யுமாறு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இந்த மனு மீது தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கவனத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கொண்டு சென்றார். இம்மனுவை பரிசீலித்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். மேலும் இத்திட்டத்தினை 14.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பு செய்து அதற்காக 48 கோடியை ஒதுக்கீடு செய்தார். 18ம் கால்வாய் நீட்டிப்பு பணிகள் கடந்த 2018 மார்ச் மாதம் நிறைவடைந்தது.
தற்போது 18ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு சோதனை ஓட்டமாக 7 நாட்களுக்கு தேவாரம் சுத்தகங்கை ஓடையிலிருந்து 200 கன அடி வீதம் தண்ணீரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட தமிழக துணை முதல்வருக்கு தேவாரம்-மூணாண்டிபட்டி, தே.ரெங்கநாதபுரம், மறவபட்டி, சோழநாயக்கன்பட்டி, புதுக்கோட்டை, பொட்டிபுரம், புதூர், ராசிங்காபுரம், சிலமலை, சில்லமரத்துபட்டி, தர்மத்துபட்டி, மேலசொக்கநாதபுரம் விலக்கு, போ.ரெங்கநாதபுரம், மற்றும் போடிநாயக்கனூர் உள்ளிட்;ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் தமிழக துணை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்தும், ஆரத்தி எடுத்தும், பல இடங்களில் தள்ளாத வயதான மூதாட்டிகள் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பொட்டு வைத்து ஆசிர்வதித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார்,; பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ஆண்டிபட்டி லோகிராஜன், சின்னமனூர் விமலேஸ்வரன், போடிநாயக்கனூர் சற்குணம், நகர செயலாளர்கள் போடிநாயக்கனூர் பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் பாஸ்கரன் மற்றும் நகர, ஒன்றிய பேரூர், கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாளில் வினியோகம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
02 Jan 2026சென்னை, ரேஷன் கார்டு தாரர்களுக்கு இந்த மாதம் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி போன்றவை வந்துவிட்டன.
-
ரஷ்ய பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் பலி
02 Jan 2026கீவ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
-
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு
02 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ ந
-
சென்னை வந்த துணை ஜனாதிபதிக்கு துணை முதல்வர் உதயநிதி வரவேற்பு: இன்று வேலூர் பொற்கோவிலுக்கு பயணம்
02 Jan 2026சென்னை, சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் வரவேற்றார்.
-
நாமக்கல்லில் சிறுவன் உயிரிழப்பு: இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
02 Jan 2026சென்னை, நாமக்கல்லில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீட்டை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம்
02 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 2-ம் கட்டமாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
-
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜன. 6-ல் புதிய புயல் சின்னம் உருவாகிறது
02 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 6-ம் தேதி அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சமத்துவ நடைபயணம் என்ற பெயரில் திருச்சியில் வைகோவின் நடைபயணம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
02 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ல் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
02 Jan 2026சென்னை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் ஜனவரி 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2026
02 Jan 2026 -
மிகப்பெரிய நெட்வொர்க்கான போதைப்பொருளை ஒழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jan 2026சென்னை, போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.
-
ஜனவரி 8-ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
02 Jan 2026சென்னை, தமிழகத்தில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 8ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
ஆஷஸ் சிட்னி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி அறிவிப்பு
02 Jan 2026லண்டன், ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
02 Jan 2026நாகர்கோவில், தி.மு.க. ஆட்சியில் 4.5 ஆண்டுகளில் 3967 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை பல்கலை. இணையத்தில் நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் படத்தை பதிவேற்ற இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jan 2026சென்னை, தஞ்சை தமிழ்ப்பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து
-
மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை அதிகரிக்க எலான் மஸ்க் முடிவு
02 Jan 2026நியூயார்க், மனித மூளையில் பொருத்தும் நியூராலிங்க் சிப் உற்பத்தியை நடப்பு ஆண்டில் (2026) அதிகரிக்க திட்டம் இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் நேரில் விநியோகம்: இல்லம் தேடி சென்று வழங்க உத்தரவு
02 Jan 2026சென்னை, சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்
-
இனி நடைப்பயணம் மேற்கொள்ளக் கூடாது: வைகோவிடம் கோரிக்கை வைத்த முதல்வர் ஸ்டாலின்
02 Jan 2026திருச்சி, மத நல்லிணக்கம், போதைப் பொருள் ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ மேற்கொள்ளும் நடைப்பயணத்தின்போது, அவரடம் முதல்வர் மு.க.
-
அர்ஜுன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்: யுவராஜ் தந்தை யோசனை
02 Jan 2026மும்பை, அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யுவராஜ் தந்தை யோசனை தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க இ.பி.எஸ். திட்டம்
02 Jan 2026சென்ன, வருகிற 4-ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நீலகிரியில் கனமழை: உதகை மலை ரயில் சேவை ரத்து
02 Jan 2026நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்
02 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்.
-
ம.பி.யில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
02 Jan 2026இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
-
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 300 பேருக்கு முதல்கட்டமாக வருகிற பிப்ரவரி மாதம் வீடுகள் ஒப்படைப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
02 Jan 2026வயநாடு, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களில் 300 பேருக்கு முதல்கட்டமாக அடுத்த மாதம் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக கேரள முதல்வர்
-
சென்னையில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை வழங்கினார் துணை ஜனாதிபதி
02 Jan 2026சென்னை, ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.


