எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி, -தேனி மாவட்டம் தேவராம் அருகே சுத்தகங்கை ஓடையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து புறப்பட்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழியெங்கும் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம், போடிநாயக்கனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகவே இருந்து வந்தன. இப்பகுதி விவசாயிகள் மழை காலங்களில் மட்டுமே விவசாயம் பார்த்து வந்தனர். மற்ற நேரங்களில் மானாவாரி விவசாயமான மக்காசோளம் உள்ளிட்ட சில பயிர்களை மட்டுமே விவசாயம் செய்து வந்தனர். இதுபோன்ற மானாவாரி விவசாயங்களில் போதிய வருமானம் கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் முல்லை பெரியார் ஆற்றிலிருந்து 18ம் கால்வாயில் வரும் தண்ணீர் லோயர்கேம்ப், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், நாகலாபுரம் வழியாக தேனி வீரபாண்டி அருகேயுள்ள முல்லைபெரியார் ஆற்றில் கலக்கிறது. எனவே 18ம் கால்வாயை தேவாரம் பகுதியிலிருந்து பொட்டிபுரம், ராசிங்காபுரம், சிலமலை, மேலச்சொக்கநாதபுரம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 34 கிராமங்களின் வழியாக நீட்டிப்பு செய்யுமாறு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் விவசாயிகள் மனு அளித்தனர். இந்த மனு மீது தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கவனத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கொண்டு சென்றார். இம்மனுவை பரிசீலித்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். மேலும் இத்திட்டத்தினை 14.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பு செய்து அதற்காக 48 கோடியை ஒதுக்கீடு செய்தார். 18ம் கால்வாய் நீட்டிப்பு பணிகள் கடந்த 2018 மார்ச் மாதம் நிறைவடைந்தது.
தற்போது 18ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு சோதனை ஓட்டமாக 7 நாட்களுக்கு தேவாரம் சுத்தகங்கை ஓடையிலிருந்து 200 கன அடி வீதம் தண்ணீரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட தமிழக துணை முதல்வருக்கு தேவாரம்-மூணாண்டிபட்டி, தே.ரெங்கநாதபுரம், மறவபட்டி, சோழநாயக்கன்பட்டி, புதுக்கோட்டை, பொட்டிபுரம், புதூர், ராசிங்காபுரம், சிலமலை, சில்லமரத்துபட்டி, தர்மத்துபட்டி, மேலசொக்கநாதபுரம் விலக்கு, போ.ரெங்கநாதபுரம், மற்றும் போடிநாயக்கனூர் உள்ளிட்;ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் தமிழக துணை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்தும், ஆரத்தி எடுத்தும், பல இடங்களில் தள்ளாத வயதான மூதாட்டிகள் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பொட்டு வைத்து ஆசிர்வதித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன், தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார்,; பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ஆண்டிபட்டி லோகிராஜன், சின்னமனூர் விமலேஸ்வரன், போடிநாயக்கனூர் சற்குணம், நகர செயலாளர்கள் போடிநாயக்கனூர் பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் பாஸ்கரன் மற்றும் நகர, ஒன்றிய பேரூர், கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.


